ஆப்நகரம்

தஞ்சையில் தொடரும் சோகம்... மின்சாரம் பாய்ந்ததில் சிறுவர்கள் பலி

சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் தஞ்சையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Jan 2021, 6:51 pm
தஞ்சை மாவட்டம், மறவக்காடு பகுதியில் சிறுவர்கள் இரண்டு பேர் ஆட்டுக்கு இலை பறிப்பதற்காக அங்குள்ள ஓடையை கடந்து சென்றுள்ளனர். அந்த பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக மின்கம்பி அறுந்து கிடந்ததாக தெரிகிறது.
Samayam Tamil கோப்பு படம்
தஞ்சை அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவர்கள் பலி


இதனை கவனிக்காத 10 வயது சிறுவன் மின்கம்பியை மிதித்ததில் அவர் உடம்பில் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இதனை கண்ட மற்றொரு சிறுவன், தனது நண்பனை காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து அவரும் பரிதாபமாக இறந்தார்.

பஸ் மீது உரசிய மின் கம்பி... ஐந்து பயணிகள் பலி

தஞ்சையை அடுத்த வரகூரில், தனியார் பேருந்து மின்கம்பியில் உரசியதில் பயணிகள் 4 பேர் உயிரிழந்த நிலையில், இன்ற மின்சாரம் பாய்ந்து இரண்டு சிறுவர்கள் இறந்துள்ள சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி