ஆப்நகரம்

கும்பகோணம்: நீச்சல் குளத்தில் இருந்து வர மறுத்த யானை மங்கலம்: வீடியோ வைரல்

கும்பகோணத்தில் நீச்சல் குளத்தில் இருந்து வர மறுத்த யானை மங்கலத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

Edited byசு. கணபதி சுப்பிரமணியன் | Samayam Tamil 18 Apr 2023, 2:13 pm

ஹைலைட்ஸ்:

  • நீச்சல் குளத்தில் இருந்து வர மறுத்த யானை மங்கலம்
  • கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் யானை செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறது
  • வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Kumbakonam elephant
Kumbakonam
கும்பகோணத்தில் உள்ளது 2000 ஆண்டுகள் பழமையான ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது.

சாமி தரிசனம்

இங்கு உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் சாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் யானை மங்களம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசிபுரிந்து வருகிறது.
மாதவரம் - ரெட்டேரி இடையே மெட்ரோ ரயில்! - அதிகாரி கொடுத்த அப்டேட்
யானையின் பங்கு
மேலும் இந்த கோவிலில் நடக்கும் அனைத்து விழாக்களுக்கும் யானையின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. அனைத்து விழாக்களிலும் யானைக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இந்த யானை இங்கே கோவிலில் நடக்கும் பூஜைகளில் பங்கேற்று சுவாமிக்கு இறைப்பணியாற்றி வருகிறது.
செல்லப்பிள்ளை
இந்த மங்களம் யானை இங்கு இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறது.

Kumbakonam


புதிய நீச்சல் குளம்
இந்த நிலையில் தினமும் தொட்டியில் தண்ணீர் வைத்து குளிக்கும் யானைக்காக கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் உள்ளேயே புதிய நீச்சல்குளம் கட்டப்பட்டது. தற்போது வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் அங்கு ஆனந்தமாக குளியல் போட்டு வருகிறது. தினமும் மூன்று வேளை யானை மங்கலம் குளிக்க வைக்கப்படுகிறது.

வெளியே வர மறுப்பு
தற்போது வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் இன்று குளிக்க வந்த யானை நீச்சல் குளத்திலிருந்து வெளியே வர மறுத்தது. யானை பாகம் பலமுறை அழைத்தும் வர மறுத்தது தண்ணீரில் மேலே பீச்சு அடித்துக் கொண்டும் தண்ணீரில் படுத்தும் குளித்தது.
சென்னை எழும்பூர் - செங்கோட்டை ரயில் நேரம் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
பார்வையாளர்களை கவர்ந்தது
மணிக்கணக்கில் ஆனந்த குளியல் போட்ட யானை மூன்று மணி நேரத்துக்கு மேலாக நீச்சல் குளத்திலேயே யானை இருந்தது. இது அங்குள்ள பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் அங்கிருந்தவர்கள் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
எழுத்தாளர் பற்றி
சு. கணபதி சுப்பிரமணியன்
நான் கணபதி சுப்பிரமணியன். ஊடகத்துறையில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். தேசிய, சர்வதேச, சினிமா செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. இப்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி