ஆப்நகரம்

தஞ்சையில் வரப்போகும் மாஸ் மருத்துவமனை.. 6.17 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள்.. அமைச்சர் மா.சு துவக்கி வைப்பு!

தஞ்சை கபிஸ்தலம் அருகே ரூபாய் 6.17 கோடி செலவில் புதிய மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 17 May 2023, 5:51 pm

ஹைலைட்ஸ்:

  • தஞ்சை கபிஸ்தலம் அருகே 6.17 கோடி ரூபாய் செலவில் புதிய மருத்துவமனை
  • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா‌. சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்
  • கொச்சைப்படுத்துதல் என்பது எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புக்கு அழகான ஒன்றள்ள
  • விஷ சாராயம் அருந்தி இறந்தவர்கள் விவகாரம் குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
6.17 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள்:

தஞ்சை கபிஸ்தலம் அருகே மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 1.63 கோடி ரூபாய் செலவில் புதிய மருத்துவமனை கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் 6.17 கோடி ரூபாய் செலவில் புதிய மருத்துவமனை கட்டிடங்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா‌. சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் மா. சுப்பிரமணியம் கூறியிருப்பதாவது:-
கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த குடும்பத்திற்கு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அரசின் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்று செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு அவர் கூறியதாவது, இறந்தவர்களுக்கு தான் அந்த நிவாரணத் தொகை தரப்பட்டுள்ளது. விஷ சாராயம் அருந்தி இறந்தது என்பது சட்டத்தில் இடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரது குடும்பம், அந்த குடும்பத்தின் எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளை கருத்தில் கொண்டு தான் தமிழகம் முதல்வர் இந்த நிதி உதவியை தந்திருப்பது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதே எடப்பாடி பழனிச்சாமி இதே மாதிரியான விஷ சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு முதலமைச்சர் ஆக இருக்கும்போது ரூபாய் 25 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கி இருக்கிறார்கள். ஓபிஎஸ் முதலமைச்சராக இருந்த போதிலும் நிவாரணத் தொகை தந்திருக்கிறார்கள். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணத் தொகை தந்திருக்கிறார்கள்.

இப்போது இருக்கும் தமிழக அரசு விஷ சாராயத்தால் உயிரிழந்த குடும்பத்திற்கு தந்த தொகை குறைவாக வேண்டுமானால் இருக்கலாம் தவிர. மனிதாபிமானம் அடிப்படையில், மனிதநேயத்தின் அடிப்படையில் தரப்பட்ட தொகையை கொச்சைப்படுத்துதல் என்பது எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புக்கு அழகான ஒன்றள்ள என்று தெரிவித்தார்.

மேலும் எத்தனால் மெத்தனால் என இரண்டு வகை இருக்கிறது. இது மது உபயோகப் பொருட்களுக்கு பயன்படுத்தக்கூடிய ஒன்று. இந்த எத்தனாளில் போதை கூடுதலாக கிடைக்கும் என்பதினாலேயே மது தயாரிப்புகளுக்கு பயன்படுத்துகிறார்கள். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் இந்த எத்தனாலை வாங்கினால் விலை அதிகம். ஆதலால் மெத்தனாலை வாங்கி அதனை பயன்படுத்தி இந்த உயிர் இழப்பிற்கு காரணமாகி கொண்டிருக்கிறார்கள்.

மெத்தனால் என்பது 10 மற்றும் 20 எம்.எல் என அதிகமாக எடுத்துக் கொண்டாலே நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு கண் பாதிப்பு ஏற்படும். அதுவே ஒரு 30 மன்றும் 40 எம்.எல் எடுத்துக் கொண்டால் உயிர் பாதிப்பு ஏற்படும். இது தெரிந்துமே கூட மெத்தநாலை பயன்படுத்தி போதை அதிகமாக வரவழைக்க வேண்டும் என கள்ளச்சாராய வியாபாரிகள் கொடூரமான செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த மெத்தனாலின் விற்பனை விநியோகம் உற்பத்தி போன்ற மூன்றையும் இந்த துறை கண்காணிப்பது என்பது தமிழக முதல்வரின் அறிவுரையின்படி செய்யவிருக்கிறோம்.

கரூரில் 120 அடி உயர செல்போன் டவரில் ஏறி பெண் போராட்டம்; 3 மணி நேரமாக போராடி மீட்ட தீயணைப்பு படை!

தீவிர கண்காணிப்பு:

பொது இடத்தில் இது அதிகமாக கிடைப்பதில்லை. கரும்பு உற்பத்தி ஆலைகளில் இருந்து மாவட்ட ஆட்சியரின் நிர்வாக தலைமையில் தான் இது கிடைக்கப்படும். எல்லோருக்கும் கூட இது கிடைக்காது தொழிற்சாலை பயன்பாடு அடிப்படையிலேயே தான் இந்த மெத்தனால் பயன்பாடு இருந்து கொண்டிருக்கிறது. தொழிற்சாலையின் பயன்பாட்டையும் தாண்டி போதையை கூடுதல் ஆக்குவதற்காக இது போன்ற கொடூரமான முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழக முதல்வர் இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து கூடுதல் நடவடிக்கையாக மெத்தனால் உற்பத்தி, மெத்தனால் விநியோகம், இந்த மெத்தனால் யாருக்கு தரப்பட வேண்டும் என்பதை கண்காணிப்பது, தரப்பட்டவர்கள் முறையாக பயன்படுத்தினார்களா என ஆய்வு மேற்கொள்ளப்படும். நேற்று கூட இந்த மெத்தனாலை புதுவையில் இருந்து வாங்கி இருக்கிறார்கள்.

இந்த மெத்தனால் எங்கிருந்து வந்தாலும் தொழிற்சாலையின் பயன்பாட்டிற்கு மட்டுமே இதனை பயன்படுத்த வேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு இதனை பயன்படுத்தக் கூடாது. இதனை கண்காணிப்பதற்கு துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் துறையின் செயலாளர்கள் மூலம் கடிதம் எழுத இருக்கின்றோம்.

தலைமைச் செயலாளர் வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மெத்தனால் விற்பனையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாகவும், இதனை வாங்கி செல்பவர்கள் எதற்காக வாங்கி செல்கின்றனர் எனவும் தொழிற்சாலை பயன்பாட்டிற்கு வாங்கி சென்றாலும் கூட எந்த மாதிரி விஷயத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட இருக்கிறது. தமிழக முதல்வர் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அறிவுறுத்தலின் பெயரில், கட்டுப்படுத்தப்பட, முறைப்படுத்தப்பட கண்காணிக்கப்பட இருக்கிறது என தெரிவித்தார்.

முன்னாள் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட கஜா புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் எல்லாம் நடைபெற்றது. இதில் அடுத்த நொடியோ, மறுநாளோ மக்களுக்கு ஆறுதல் சொல்ல மக்களை சந்திக்க செல்லவில்லை. இதனை எடப்பாடி பழனிச்சாமி யோசிக்க வேண்டும். மேலும் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டிற்கும் நேரில் செல்வதை தவிர்த்து கோட்டையில் உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு தெரிவித்திருக்கலாம்.

கலைஞர் பற்றி பேசி கண்ணீர் விட்டு அழுத அமைச்சர் டி.ஆர்.பி ராஜா; திருவாரூரில் நெகிழ்ச்சி..!

பணியிடை மாற்றம் செய்தது உள்ளிட்ட விஷயங்களுக்கு, ஆனால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிக்க உத்தரவிட்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்டு நிவாரணங்களை தர சொன்னவர் தமிழக முதல்வர். துரித நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த செயல்களில் கூட ஈடுபடாமல் 10 ஆண்டு காலம் ஆட்சி செய்து ஒன்றுமே செய்யாத எடப்பாடி பழனிச்சாமி தூங்கிக் கொண்டு இருந்து தமிழக முதலமைச்சரை பொம்மை முதலமைச்சர் என சொல்வது எந்த மாதிரி சொல்வது என எடப்பாடியே முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்றார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி