ஆப்நகரம்

கும்பகோணம் நகை கடையில் நகைகள் வாங்குவது போல பாவலா காட்டி கைவரிசை - கடையில் ஆளிருந்த போதே துணிகரம்

கும்பகோணம் பெரிய கடை வீதியில் உள்ள நடகை கடையில் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Curated byM.முகமது கெளஸ் | Samayam Tamil 11 May 2023, 10:39 pm

ஹைலைட்ஸ்:

  • கும்பகோணம் பெரிய கடைவீதி நகை கடையில் மர்ம நபர்கள் கைவரிசை
  • நகைகள் வாங்குவது போல உள்ளே நுழைந்து தங்க நகைகள் திருட்டு
  • கடையில் உள்ள சிசிடிவி காட்சியை வைத்து காவல்துறையினர் விசாரணை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Kumbakonam jewellery shop jewels theft
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பெரிய கடை வீதியில் திருமலை ஜுவல்லரி என்ற நகை கடை செயல்பட்டு வருகிறது. அதனை அப்பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர் வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இவரது நகை கடைக்கு பகல் 2 மணி அளவில் இரண்டு நபர்கள் நகைகள் வாங்குவதாக கூறி வந்துள்ளனர். அவர்கள் அங்கு தங்களது வீட்டின் நிலைக்கு கீழ் வைப்பதற்கு நகை செட் வேணும் என கேட்டதாக கூறப்படுகிறது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அவர்கள் கேட்டப்படியே நகைகளை எடுத்து காட்டும்போது அவர்களும் நகைகள் வாங்குவது போலவே பாவலா காட்டிக் கொண்டு நோட்டமிட்டு கொண்டிருந்தனர். பின்னர் அங்கிருந்த 134 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் இருந்த ஒரு பிளாஸ்டிக் பெட்டியை எடுத்துக் கொண்டு கடையை விட்டு வெளியேறி உள்ளனர்.



அந்த இரண்டு நபர்களும் வெளியே சென்ற பின்னர்தான் கடையிலிருந்து நகை திருடப்பட்டு உள்ளது தெரிய வந்தது. உடனடியாக இது குறித்து நகைக்கடை உரிமையாளர் பாபு கும்பகோணம் நகர கிழக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

நாமக்கலில் அதிகாலையில் பயங்கரம்.. சாலை நடுவே உள்ள தடுப்பில் அரசு பேருந்து மோதி விபத்து.. பரபரப்பு சிசிடிவி காட்சி..

அந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நகை கடைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நகை கடையில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சியை கைப்பற்றி நகைகளை திருடி சென்ற நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருடப்பட்ட அந்த 134 கிராம் எடை கொண்ட தங்க நகைகளின் மதிப்பு சுமார் 8 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் கும்பகோணம் நகை கடைக்காரர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
M.முகமது கெளஸ்
நான் முகமது கெளஸ். ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டமும் ஊடகவியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். டிஜிட்டல் ஊடகத்தில் எனக்கு இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளது. க்ரைம் சார்ந்த செய்திகள் எழுதுவதில் முழு ஈடுபாடு காட்டும் ஆர்வம் உண்டு. தற்போது டிஜிட்டல் ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியா, சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி