ஆப்நகரம்

இன்னொரு அனிதா உருவாகாமல் தடுத்த தமிழக அரசு

தனியாா் சுயநிதி கல்லூரிகளில் ஒதுக்கீடு கிடைக்கும் மாணவா்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் விளைவாக சென்னை ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில தற்போது லட்சுமிப்பிரியா தயாராகியுள்ளார்.

Samayam Tamil 23 Jan 2021, 5:28 am

ஹைலைட்ஸ்:

  • தனியாா் சுயநிதி கல்லூரிகளில் ஒதுக்கீடு கிடைக்கும் மாணவா்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
  • இதன் விளைவாக சென்னை ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில தற்போது லட்சுமிப்பிரியா தயாராகியுள்ளார்.

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil edappadi palaniswami
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமைதூஉக்கும் தொழிலாளியின் மகள் லட்சுமிப்பிரியா. பிளஸ்டூ முடித்த இவர், தன் குடும்ப வறுமையையும் கடந்து நீட் தேர்வுக்காக கடுமையாக உழைத்தன் விளைவாக, நீட் தேர்வில் 185 மதிப்பெண்கள் பெற்றார்.
இந்த நிலையில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவா்களுக்கு தமிழக அரசு 7.5% இட ஒதுக்கீடு கொண்டுவந்தது. இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு நவ. 19 இல் சென்னையில் நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்ற லட்சுமிபிரியாவுக்கு சுயநிதி மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டது.

ஆனால், வறுமை காரணமாக லட்சுமிபிரியா அதில் சேரவில்லை. அவரது மருத்துவக் கனவைக் குடும்ப வறுமை வென்றிருந்தது.

பெண்களை வைத்துத் தேர்தலில் வெல்ல பழனிசாமி போட்ட பிளான்!

இந்நிலையில், அடுத்த சில நாள்களில் தனியாா் சுயநிதி கல்லூரிகளில் ஒதுக்கீடு கிடைக்கும் மாணவா்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் விளைவாக சென்னை ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில தற்போது லட்சுமிப்பிரியா தயாராகியுள்ளார்.

சொல்லப்போனால், இன்னொரு அனிதா உருவாகாமல் தடுத்த தமிழக அரசின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது.

அடுத்த செய்தி