ஆப்நகரம்

2,500 ரூபாய் பொங்கல் பரிசு எங்களுக்கு இல்லையா? -பொதுமக்கள் ஏமாற்றம்!

பொங்கல் பரிசுத் தொகை 2,500 ரூபாய் தங்களுக்கு கிடைக்காததால் தஞ்சை அம்மாப்பேட்டை பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Samayam Tamil 6 Jan 2021, 11:16 am
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் Z - 174 புளியக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உட்பட்ட புளியக்குடி அங்காடியில் 594 குடும்ப அட்டைகள் உள்ளன.
Samayam Tamil தஞ்சை அம்மாப்பேட்டை
நியாய விலை அங்காடி -தஞ்சை அம்மாப்பேட்டை


இந்த நிலையில் தற்போது தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புடன்கூடிய 2,500 ரூபாய் 534 குடும்ப அட்டைதாரர்க்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 10% சதவீதம் பேருக்கு தமிழக அரசு இன்னும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று அலுவலர்கள் கூறியதன் அடிப்படையில் மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.

அரசின் இந்த பராபட்சமான இந்த செயலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு நிர்வாகிகள் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளதுடன், எதன் காரணமாக 10% சதவீத நிதி ஒதுக்கீடு செய்யபடவில்லை என்பதற்கு அரசு அதிகாரிகள் உரிய விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி