ஆப்நகரம்

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்... முதல்வர் அறிவிப்பு

இந்த அறிவிப்பால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 14 Jan 2021, 5:21 am
டெல்டா பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களைக் ஆய்வு செய்து வருகின்றனர்.
Samayam Tamil Edappadi palaniswami


ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த தங்களுக்கு வைக்கோல் கூட மிஞ்சாத அளவிற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாவும், அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக தங்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேண்டுகோள் வைத்திருந்தனர்.

இந்நிலையில், தென்மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி