சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் சுதாகரன், இளவரசி என சசிகலாவுக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமாக உள்ள சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டு வருகின்றன. அதன் வரிசையில் தஞ்சை மாவட்டத்தில் இருவருக்கும் சொந்தமான சொத்துக்கள் தற்போது அரசுடைமை ஆக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " தஞ்சாவூர் மாவட்டம், வஉசி நகர் முதல் தெருவில், சுதாகரன் மற்றும் இளவரசிக்கு சொந்தமான சுமார் 26 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட சொத்து பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்படும்.
அரசுடமையாக்கப்பட்ட சசிகலா உறவினர் இளவரசி, சுதாகரன் சொத்துகள்!
நீதிமன்ற உத்தரவுப்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்" என்று மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " தஞ்சாவூர் மாவட்டம், வஉசி நகர் முதல் தெருவில், சுதாகரன் மற்றும் இளவரசிக்கு சொந்தமான சுமார் 26 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட சொத்து பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்படும்.
அரசுடமையாக்கப்பட்ட சசிகலா உறவினர் இளவரசி, சுதாகரன் சொத்துகள்!
நீதிமன்ற உத்தரவுப்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்" என்று மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.