ஆப்நகரம்

தஞ்சை பெரிய கோயிலில் தொடங்கியாச்சு சித்திரை பெருவிழா - மங்கள வாத்தியம் முழங்க விழா விமர்சை

தஞ்சாவூர் பெரிய கோயிலில் 18 நாட்கள் நடக்கும் சித்திரை பெருவிழா என்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Curated byM.முகமது கெளஸ் | Samayam Tamil 24 Apr 2023, 4:52 pm

ஹைலைட்ஸ்:

  • தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை திருவிழா துவக்கம்
  • 18 நாட்கள் நடைபெறும் திருவிழாவானது கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது
  • மேளதாளம் முழங்க விழா விமர்சையாக நடத்தப்பட்டது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Thanjavur big temple chithirai thiruvizha
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சை பெரிய கோயில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தஞ்சாவூர் மாவட்டம் மக்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மேலும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் தினம் தோறும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வாடிக்கை.
இத்தனை புகழ்வாய்ந்த இந்த பெரிய கோயிலில் வருடா வருடம் சித்திரை மாதம் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படியே இந்த ஆண்டும் சித்திரை திருவிழாவுக்காக கடந்த மார்ச் மாதம் மூன்றாம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதனைத் தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை முன்னிட்டு சந்திரசேகரர் பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர்.

தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க விழா கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக, கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் அடுத்த மாதம் (மே) 1-ந் தேதி காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெறுகிறது. கொடியேற்ற விழாவில் அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ரெங்கராஜ், முருகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.சித்திரை பெருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடைபெறுகிறது.



2-ம் நாளான நாளை (செவ்வாய்கிழமை) காலை 8 மணிக்கு மேல் பல்லக்கில் விநாயகர் புறப்பாடும், மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடும் நடைபெறுகிறது. 3-ம் நாளான 19-ந் தேதி காலை 8 மணிக்கு பல்லக்கில் விநாயகர் புறப்பாடும், மாலை 6.30 மணிக்கு மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் புறப்பாடும் நடைபெற உள்ளது.

காதல் திருமணம் செய்த புதுமணப்பெண் தூக்கில் தொங்கிய அவலம் - திருப்பத்தூரில் அதிர்ச்சிகர சம்பவம்

4-ம் நாளான 20-ந் தேதி காலையில் விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மாலையில் மேஷ வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பாடு நடக்கிறது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வரும் நாட்களில் நாள்தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை, சாமி புறப்பாடு நடைபெறுகிறது. மே 1-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

விழாவின் கடைசி நாளான மே 4-ந் தேதி தீர்த்தவாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.
எழுத்தாளர் பற்றி
M.முகமது கெளஸ்
நான் முகமது கெளஸ். ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டமும் ஊடகவியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். டிஜிட்டல் ஊடகத்தில் எனக்கு இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளது. க்ரைம் சார்ந்த செய்திகள் எழுதுவதில் முழு ஈடுபாடு காட்டும் ஆர்வம் உண்டு. தற்போது டிஜிட்டல் ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியா, சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி