ஆப்நகரம்

10 வயது சிறுமியை திருமணம் செய்து குடித்தனம்: தேனியில் இப்படி ஒரு அவலம்!

தேனி மாவட்டத்தில் 10 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தந்தையின் செயல் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. போலீசார் தகவல் அறிந்து திருமணம் செய்தவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Samayam Tamil 20 Oct 2021, 9:55 pm
தேனி மாவட்டம் கூடலூர் காஞ்சிமரத்துறை பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு திருமணம் நடை பெற்றுள்ளதாக குழந்தைகள் நல அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து தேனி மாவட்ட குழந்தைகள் நல குழுவினர் குறிப்பிட்ட அந்தப் பகுதியில் உள்ள சிறுமியின் வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டார்.
Samayam Tamil 10 வயது சிறுமியை திருமணம் செய்து குடித்தனம்: தேனியில் இப்படி ஒரு அவலம்!


விசாரணையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிறுமியின் தந்தை வழி உறவினர் விஜய் என்ற 24 வயது இளைஞருக்கு வீட்டிலேயே வைத்து திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. மேலும் தற்போது திருமணம் செய்தவரின் பாட்டி வீட்டில் குடியிருந்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து குழந்தைகள் நல குழு உறுப்பினர் பாண்டியம்மாள் கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுமியின் தந்தை முருகன் மற்றும் திருமணம் செய்த விஜய் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் இருவரையும் நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தகாத உறவை காட்டிக்கொடுத்தவர் கொடூரமாக கொலை: தேனியில் அதிர்ச்சி!
மேலும், சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்ததாக உறவினர்கள் மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்ட குழந்தைகள் நலக் குழுவினர் மற்றும் காவல்துறையினர் சிறுமிக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைக்கு பின்பு குழந்தைகள் நலக் குறைவினரிடம் ஒப்படைக்கப்படுவார் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

குழந்தை திருமணம் தொடர்பாக அரசு பல்வேறு விழிப்புணர்வு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் இது போன்ற குழந்தைத் திருமணங்கள் சமூகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவது வேதனை தருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி