ஆப்நகரம்

அடங்காத தேனி ஆட்டோக்கள்: 500 ரூபாயில் அடக்கிய போலீசாரின் ஸ்டிரிக்ட் ஆக்‌ஷன்!

“ஊரடங்கா இது ஆட்டோலாம் ஓடுது” எனத் தேனி மாவட்டத்தில் அதிர்ச்சியோடு சாலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் போலீசார் தங்கள் கராரான நடவடிக்கையால் ஆட்டோ ஓட்டுநர்களுக்குப் பாடம் எடுத்தனர்.

Samayam Tamil 13 May 2021, 6:15 pm
தேனி மாவட்டத்தில் விதிமீறிய ஆட்டோக்களுக்கு ரூபாய் 500 வீதம் அபராதம் விதித்த மாவட்ட காவல்துறையினரின் செயல் பேசு பொருளாக மாறியுள்ளது.
Samayam Tamil அடங்காத தேனி ஆட்டோக்கள்: 500 ரூபாயில் அடக்கிய போலீசாரின் ஸ்டிரிக்ட் ஆக்‌ஷன்!


தேனி மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிப் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்து தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் தேனி மாவட்ட நிர்வாகம், மற்றும் காவல்துறையினர் பல்வேறு தடுப்பு, விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அதிகாரிகளும் காவல்துறையினரும் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

தேனி ரேஷன் அரிசியில் புழு பூச்சிதான் இருக்கு: 2பேர் ரோட்டில் போராட்டம்!

அதன் ஒரு பகுதியாக அத்தியாவசியத் தேவையின்றி இயங்கிய ஆட்டோக்களை கண்டறிந்து காவல்துறையினர் அபராதம் விதித்து வருகிறார்கள். அப்படி தேனியில் விதிமுறைகளை மீறி இயங்கிய நூறு ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுத்து ரூபாய் 500 வீதம் 50 ஆயிரம் அபராதம் வசூலித்து உள்ளனர்.

அடுத்த செய்தி