ஆப்நகரம்

வாழை சாகுபடி தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம்: தேனியில் குவிந்த விவசாயிகள்!

தேனியில் தேசிய தோட்டக்கலை வாரியம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து வாழை தொகுப்பு வளர்ச்சி திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தியது. இதில் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Curated bySrini Vasan | Samayam Tamil 30 Jun 2022, 3:33 pm

ஹைலைட்ஸ்:

  • வாழை சாகுபடி தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம்
  • தேனியில் குவிந்த விவசாயிகள்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil விழிப்புணர்வு கருத்தரங்கம்
தேனியில் தேசிய தோட்டக்கலை வாரியம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து வாழை தொகுப்பு வளர்ச்சி திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தியது.
பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேசிய தோட்டக்கலை வாரிய அதிகாரிகள், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள் மற்றும் தோட்டக்கலை கல்லூரியின் பேராசிரியர்கள் கலந்து கொண்டு வாழை தொகுப்பு வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.


அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த வாழை தொகுப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகாம் சார்பில் முதல் கட்டமாக கம்பம்,சின்னமனூர், உத்தமபாளையம், தேனி ஆகிய நான்கு வட்டாரங்களில் 6300 ஹெக்டேர் அளவில் 5 லட்சம் மெட்ரிக் டன் வாழை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தரமான வாழைத்தார்களை விளைவிப்பது, பாரம்பரிய வாழை ரகங்களை உற்பத்தி செய்வது, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை தயாரிப்பது, சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட வாழை சாகுபடி தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

ஏற்றுமதியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம்: தேனி ஆட்சியர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!
முன்னதாக தேனி மாவட்டத்தில் விளையும் வாழைத்தார்கள், பழங்கள், மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், தோட்டக்கலை பயிர்கள் தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை விவசாயிகள் பார்வையிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தேசிய தோட்டக்கலை வாரிய துணை இயக்குனர் திரு.ராஜா, பெரியகுளம் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் திரு.ராஜாங்கம்,தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், வாழை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி