ஆப்நகரம்

டானிக் எனப் பூச்சி மருந்தைக் குடித்த மூதாட்டி உயிரிழப்பு!

வயது மூப்பின் காரணமாக கண் பார்வை மங்கியதில் மூதாட்டி வித்தியாசம் உணராமல் உயிர் காக்கும் மருந்து என பூச்சி மருந்தை குடித்து பரிதாபமாக உயிரிழந்தார்...

Samayam Tamil 11 Sep 2020, 5:44 pm
தேனி மாவட்டம் போடியில் டானிக் என நினைத்து பூச்சி மருந்தைக் குடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த மூதாட்டியின் அறியாமை மாவட்ட மக்களை வேதனையடைய செய்துள்ளது.
Samayam Tamil டானிக் எனப் பூச்சி மருந்தைக் குடித்த மூதாட்டி உயிரிழப்பு!
டானிக் எனப் பூச்சி மருந்தைக் குடித்த மூதாட்டி உயிரிழப்பு!


தேனி மாவட்டம் போடி, மேலச் சொக்கநாத புரம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள். வயது 79. இவர் மனைவி சுப்புலட்சுமி. வயது 75. வயது மூப்பு காரணமாக சுப்புலட்சுமிக்கு கண் பார்வை மங்கிவிட்டது. இடது கைது செயல்படுவதில்லை.

இதையடுத்து சுப்புலட்சுமி தொடர்ந்து மருந்துகள் எடுத்து வருகிறார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை தனது குணநலத்திற்காக டானிக் குடிக்கிறேன் என நினைத்து வீட்டிலிருந்த பூச்சி மருந்தைக் குடித்து விட்டார்.

மருந்தைக் குடித்த சிறிது நேரத்தில் சுப்புலட்சுமி மயங்கி கீழே விழுந்து விட்டார். இதையடுத்து சுப்புலட்சுமியின் உறவினர்கள் அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

மது குடிப்பதற்காக மனைவி, குழந்தையை விட்டு சென்ற வாலிபர்..! நெல்லையில் நேர்ந்த அதிர்ச்சி

போடி மருத்துவமனையில் முதலுதவி மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. அங்கு போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லை என்பதால் மேல் சிகிச்சைக்காகத் தேனி அரசு மருத்துவமனைக்கு சுப்புலட்சுமி அனுப்பி வைக்கப்பட்டார்.

2 நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்த சுப்புலட்சுமி வியாழக் கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சுப்புலட்சுமியின் உறவினர்கள் போடி தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி