ஆப்நகரம்

தடுப்பூசி 2 முறை எடுத்தும் பலியான தேனி போலீசுக்கு 48 குண்டுகள் முழுங்க அரசு மரியாதை!

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த தேனி மாவட்ட போலீஸ் உதவி ஆய்வாளருக்கு 48 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு இறுதி மரியாதை செலுத்தியுள்ளது, மாநிலத்தில் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது.

Samayam Tamil 8 Jun 2021, 1:59 pm
தேனி மாவட்டம் போடி ஜீவா நகரைச் சேர்ந்தவர் அழகுராஜா. போடி நகர் காவல் நிலையத்தில் சிறப்புச் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் முழுமையாக கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவர்.
Samayam Tamil தடுப்பூசி 2 முறை எடுத்தும் தேனி எஸ்ஐ கொரோனா வந்து பலி: 48 குண்டுகள் முழுங்க அரசு மரியாதை!


கோவாக்சின் 2ஆவது தவணை தடுப்பூசியை ஒரு வாரத்திற்கு செலுத்திய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து போலீஸ் அழகுராஜா சிகிச்சைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த சூழலில் சிகிச்சை பலனளிக்காமல் அழகுராஜா பரிதாபமாக நேற்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் தேனி மாவட்டம் போடி நகராட்சி மயானத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

தேனி தண்ணீரில் பரவும் கொரோனா: இதுதான் காக்கும் லட்சணமா?
அங்கு அவரது உடலுக்கு 48 குண்டுகள் முழங்க காவல்துறையினர் இறுதி அரசு மரியாதை செய்தனர். பின்னர் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த எஸ்எஸ்ஐ அழகுராஜா 1988ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்றவர்.

1999ஆம் ஆண்டு சிறப்புச் சார்பு ஆய்வாளராகத் தேவாரம், கம்பம், பெரியகுளம் காவல் நிலையங்களில் பணியாற்றிய வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட போடி நகர் காவல் நிலையத்தில் சிறப்புச் சார்பு ஆய்வாளராக பணியில் நியமிக்கப்பட்டார். 33 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றிய உள்ளார். அழகு ராஜாவுக்கு வேலு தாய் என்ற மனைவியும் பிரேமலதா, கிருஷ்ணப்பிரியா என்ற 2 மகள்களும், சந்தோஷ்குமார் என்ற மகனும் உள்ளனர்.

அடுத்த செய்தி