ஆப்நகரம்

சிறுத்தைக்குக் கறி விருந்து பிடிக்கவில்லை?: பிடிபடாமல் தேனியில் தொடர்ந்து போக்கு!

தேனி மாவட்டம் கைலாசநாதர் கோயில் கிரிவலப்பாதையில் சுற்றித்திரிந்த சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்காததால் பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர்.

Samayam Tamil 28 Jun 2021, 5:47 pm
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது கைலாசபட்டி. இங்குள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மலைமேல் கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. மலையைச் சுற்றி உள்ள கிரிவலப்பாதையில் பொதுமக்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதேவேளை மலையைச் சுற்றி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது. இதனால் விவசாயிகள் இந்தப் பாதையைப் பயன்படுத்தி வந்தனர்.
Samayam Tamil சிறுத்தைக்குக் கறி விருந்து பிடிக்கவில்லை?: பிடிபடாமல் தேனியில் தொடர்ந்து போக்கு!


இந்த சூழலில் ஜுன் 23ஆம் தேதி மாலை கிரிவலப் பாதையில் சென்றவர்கள் சிறுத்தை நடமாட்டத்தை செல்போனின் வீடியோ எடுத்து காவல்துறை மற்றும் வனத்துறையினர் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து சிறுத்தை நடமாட்டம் உள்ள மலைப்பகுதியில் 3 கேமராக்களை வனத்துறையினர் பொருத்தினர். இதன்மூலம் சிறுத்தை நடமட்டத்தை உறுதி செய்தனர்.

தேனியில் தளர்வு வந்தபோதும் பேருந்து இல்லாமல் ஏமாற்றப்படும் பொது மக்கள்!
இதைத் தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டம் உள்ள பாதையில் சிறுத்தையைப் பிடிக்க (ஜுன் 27ஆம் தேதி) காலை கூண்டு வைத்தனர். கூண்டிற்குள் சிறுத்தையை வரவழைக்க ஆட்டுக்குட்டி, மாட்டு இறைச்சி, கோழி உள்ளிட்டவற்றை விருந்திற்காக வைத்தனர்.

எனினும் சிறுத்தை சிக்கவில்லை. இதனால் தற்போது மாற்றி யோசனைகளை வனத்துறையினர் ஆலோசனை செய்து வருகின்றனர். இதற்கிடையே சிறுத்தையைப் பிடிக்கும் வரை கைலாசநாதர் கோயில் கிரிவலப்பாதையில் பக்தர்கள், பொதுமக்கள், விவசாயிகள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி