ஆப்நகரம்

வீடு வீடாகச் சென்று மக்களிடம் குறைகளைக் கேட்கும் தேனி ஆட்சியர்!

தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தேனி மாவட்டத்தின் 17ஆவது ஆட்சியராக கேவி முரளிதரன் கடந்த மே மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Samayam Tamil 16 Jul 2021, 5:19 am
தேனி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற நாள் முதல் அரசு மக்களுக்குக் கொண்டு வரும் திட்டங்களைக் களத்தில் இறங்கி ஆய்வு செய்து அதை எளிமைப்படுத்தும் பணியைச் செய்பவர் முரளிதரன்.
Samayam Tamil வீடு வீடாகச் சென்று மக்களிடம் குறைகளைக் கேட்கும் தேனி ஆட்சியர்!


குறிப்பாக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் மீது அதிக கவனம் செலுத்தித் தீர்வுகளையும் உடனடியாக கொடுத்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தேக்கம்பட்டி மற்றும் பிச்சம்பட்டியில் உள்ள பெரியார் சமத்துவபுரத்திற்கு நேரடியாகச் சென்று அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து உடனடியாக அதை ஏற்படுத்தித் தர வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த சூழலில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட மனுக்களின் உண்மைத் தன்மை குறித்து சின்னமனூர் பகுதியில் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார்‌. மேலும் தகுதி உள்ள மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தங்கத் தமிழ்செல்வன் காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டம் தேனியின் ஹாட் டாப்பிக்கானது!
இதற்கிடையே ஓடைப்பட்டி சென்ற ஆட்சியர் அவ்வழியாகச் சென்ற அரசு பேருந்தை மறித்து ஆய்வு செய்தார். அப்போது பேருந்து பயணத்தில் முகக்கவசம் அணியாது இருந்தவர்களுக்கு முகக்கவசம் வழங்கி கொரோனா காலத்தின் பிரச்சினைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.

மக்களின் குறைகளைக் களத்திற்கே நேரடியாகச் சென்று கேட்டு குறைகளைத் தீர்த்து வரும் தேனி ஆட்சியர் முரளிதரன் நடவடிக்கை மக்கள் மனங்களை வென்று வருகிறது எனச் சொன்னால் மிகையல்ல.

அடுத்த செய்தி