ஆப்நகரம்

10 வருடச் சபதம்: முதல்வர் ஸ்டாலினால் ஒரு சட்டை போட்ட தேனி திமுகக்காரர்!

திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என 10 வருடங்களாக சபதம் எடுத்திருந்த நிலையில், அந்த கனவு இன்று நிறைவேறியது...

Samayam Tamil 7 May 2021, 3:51 pm
சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததுள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக திமுகவினர் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகிறார்கள்.
Samayam Tamil 10 வருடச் சபதம்: முதல்வர் ஸ்டாலினால் ஒரு சட்டை போட்ட தேனி திமுகக்காரர்!


அதேவேளையில் 10 ஆண்டுக் கால சபதத்தை திமுக நிர்வாகி ஒருவர் நிறைவேற்றியுள்ளார். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி திமுக கிளைச் செயலாளர் சேகர்.

அவர் கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்த பொழுது அதை எதிர்த்து கருப்பு சட்டை அணிந்துள்ளார். மீண்டும் திமுக ஆட்சி வரும் வரையில் கருப்பு சட்டையை மாற்றுவது இல்லை எனச் சபதம் எடுத்திருந்தார். தற்போது அந்த சபதம் நிறைவேறியுள்ளது.

ஓபிஎஸ் உறவினர் கிணற்றில் விழுந்து பலி: தேனியில் என்ன நடந்தது?

பத்து ஆண்டுகள் கழித்து திமுக வெற்றி பெற்று முக ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார். இந்த நாளை வெற்றி நாளாகக் கொண்டாடி சேகர் கருப்புச்சட்டைக்கு பதில் வெள்ளை சட்டை அணிந்துகொண்டார். அவருக்கு திமுக நிர்வாகிகள் வெள்ளைச் சட்டைகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

அடுத்த செய்தி