ஆப்நகரம்

தொடர் கனமழையால் உயர்ந்த வைகை அணை... முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் வைகை அணை 66 அடியை எட்டியுள்ளதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை பொதுப்பணி துறையினரால் விடப்பட்டது.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 30 Jul 2022, 12:44 pm

ஹைலைட்ஸ்:

  • ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணை
  • 66 அடியாக உயர்ந்ததை அடுத்து முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • நீர் வரத்து 2288 கன அடி, நீர் வெளியேற்றம் 69 கன அடி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil vaigai
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் கடந்த சில தினங்களாக நீர் பிடிப்பு பகுதிகளான மூலவைகையாறு வருசநாடு சின்னசுருளி அருவி, கொட்டகுடி ஆறு முல்லை பெரியாறு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக வைகை அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்ததை அடுத்து முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
உள்ளிருப்பு போராட்டத்தில் ஆண்டிபட்டி அதிமுக கவுன்சிலர்கள்; முடிவுக்கு எட்டாத பேச்சுவார்த்தை!

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களில் வசிக்கும் வைகை ஆற்று கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுபணிதுறையினர் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் யாரும் ஆற்றில் இறங்கவோ கடக்கவோ கூடாது என்றும் பொதுப்பணி துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தற்போது அணையின் நீர் மட்டம் 66 அடியாகவும், நீர் இருப்பு 4854 மி.கன அடியாகவும் நீர் வரத்து 2288 கன அடியாகவும் நீர் வெளியேற்றம் 69 கன அடியாகவும் உள்ளது. வைகை அணை இரண்டு மற்றும் மூன்றாம கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணி துறையினர் சார்பாக கூறப்பட்டது.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி