ஆப்நகரம்

தேனியில் காட்டு தீ 50 ஏக்கர் கருகி நாசம்: அரசு கப்சிப்!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காட்டு தீ காரணமாக 50 ஏக்கர் பரப்பளவு காடு பகுதி எரிந்து கருகி நாசமாகியுள்ளது.

Samayam Tamil 20 Jun 2021, 11:30 pm
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
Samayam Tamil தேனியில் காட்டு தீ 50 ஏக்கர் கருகி நாசம்: அரசு கப்சிப்!


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் முருகமலைப் பரமசிவன் கோயிலுக்கு கீழ் உள்ள வனப்பகுதியில் இன்று காலை முதல் காட்டு தீ பற்றி எரிந்து வருகின்றது.

இதில் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட காடுகள் பற்றி எரிகிறது. விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைச் செடிகளும் காட்டுத் தீயினால் எரிந்து கருகி வருகின்றன.
ஆட்டுக்குப் பால் கொடுக்கும் பசு: தேனியில் சாத்தியமானது எப்படி?
இதனால் அப்பகுதியில் வாழும் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டு தங்கள் உயிரை காத்து கொள்ள அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குள் தஞ்சம் புகுந்துள்ளன.

இந்த சூழலைக் கருத்தில் கொண்டு காட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி