ஆப்நகரம்

ஓபிஎஸ் உறவினர் கிணற்றில் விழுந்து பலி: தேனியில் என்ன நடந்தது?

முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் உறவினர் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 May 2021, 4:53 pm
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுக பட்டியைச் சேர்ந்தவர் அன்புக்கரசன். இவர் முன்னாள் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மனைவியின் தங்கை கணவர். இவர் தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் கிணற்றின் அருகே ஓர பகுதியில் தோட்ட வேலையில் ஈடுபட்டுள்ளார்.
Samayam Tamil ஓபிஎஸ் உறவினர் கிணற்றில் விழுந்து பலி: தேனியில் என்ன நடந்தது?


அப்போது எதிர்பாராத விதமாக 80 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்ததுள்ளார். அதைப் பார்த்த வேலையாட்கள் உடனடியாக காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். எனினும் அதற்குள் அவர் நீரில் மூழ்கியதால் உடனடியாக பெரியகுளம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் நீர் அதிகமாக இருந்ததால் இரண்டு மின் மோட்டார்களை கொண்டு கிணற்று நீரை வெளியேற்றினர்.

9ஆம் தேதி இபிஎஸ், ஓபிஎஸ் சிஎம்களாக பதவியேற்பு: குச்சனூர் கல்வெட்டு!

இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு அன்புக்கரசனின் சடலத்தை மீட்டனர். இச்சம்பவம் குறித்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி