ஆப்நகரம்

வைத்த ஒரே மாதத்தில் சிலை சுவாகா; மங்கள விநாயகருக்கு மங்கல பாட்டா?

தேனி மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்த ஒரே மாதத்தில் விநாயகர் சிலையை மர்ம ஆசாமிகள் இரவோடு இரவாக திருடி சென்றனர். இந்த சம்பவம் பொதுமக்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Samayam Tamil 20 Sep 2021, 3:38 pm
தேனி எம்.ஜி.ஆர் நகரில் மங்கள விநாயகர் கோயில் உள்ளது. அங்கு கற்சிலையால் ஆன விநாயகரை அப்பகுதி பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று காலையில் கோவிலில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை காணாமல் போனதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Samayam Tamil கோப்பு படம்
கோப்பு படம்


இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் நள்ளிரவு சுமார் 1.10 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் இருவர் கைகளாலே விநாயகர் சிலையை அசைத்து எடுத்து சென்றிருப்பது பதிவாகி உள்ளது.

இதுதொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் தேனி நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கே.சி.வீரமணி மூக்கு கண்ணாடி ரசீது; சிரிப்பாய் சிரிக்கும்..சமூக வலைதளம்!

கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி மங்கள விநாயகர் கோவில் உருவாக்கப்பட்டு புதிதாக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகரை மக்கள் பூஜை மற்றும் வழிபாடுகள் செய்து வந்த நிலையில் விநாயகரை மர்ம நபர்கள் தூக்கிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவர்களை தொற்று பாதிக்காது; அமைச்சர் மா.சுப்பிரமணியன் புது குண்டு!

எனவே விநாயகர் சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும். விநாயகர் சிலையை மீட்டு அதே இடத்தில் வைத்து வழிபாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி