ஆப்நகரம்

தேனியில் முதல் போகத்திற்கான நடவு பணி ஆரம்பமானது: நல்ல மகசூல் கிடைக்குமா!

கொரோனா 2ஆம் அலை காரணமாகத் தடைப்பட்ட விவசாயப் பொருட்கள் அழிந்து வந்த நிலையில், இப்போது முதல் போக நடவு பணி தேனியில் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 18 Jun 2021, 4:52 pm
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் முதல் போகத்திற்கான நடவு பணிகளைத் தொடங்கி உள்ளார்கள்.
Samayam Tamil தேனியில் முதல் போகத்திற்கான நடவு பணி ஆரம்பமானது: நல்ல மகசூல் கிடைக்குமா!


முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீரைக் கொண்டு கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

ஜூன் முதல் நாள் முதல் போகச் சாகுபடிக்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முதல் பருவத்திற்கான நடவு பணிகளை மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளனர்.

மிலிட்டரி சரக்கு வாங்க டாஸ்மாக்கை மிஞ்சிய கூட்டத்தால் தேனியில் பரபரப்பு!
கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் இப்போது தளர்வுகள் வந்து கொண்டுள்ளன.

அடுத்த செய்தி