ஆப்நகரம்

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு - ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம்

கேரளாவில் சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு இன்று சபரிமலையில் கோயில் நடை திறக்கப்பட்டது.

Samayam Tamil 12 Apr 2023, 12:11 pm

ஹைலைட்ஸ்:

  • சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு
  • கேரளாவில் சித்திரை விஷூவை முன்னிட்டு திறக்கப்பட்டது
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil சபரிமலை ஐயப்பன் கோயில்
கேரளா மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலில் நடை ஒவ்வொரு மாதமும் தமிழ் மற்றும் மலையாள மாத பிறப்பின் போது முதல் ஐந்து நாட்கள் திறக்கப்படுவது வழக்கம்.
கேரளாவில் சித்திரை மாதத்தின் தொடக்கம் விஷூ கனிக் காணும் நிகழ்வாகும். அதை முன்னிட்டு சீசன் காலத்திற்கு இணையாக தற்போதும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அதிக அளவில் கூட்டம் தென்படும்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சித்திரை மாதத்தின் விஷூ துவங்கியதால் இன்று கோயில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து கோயிலில் தீபம் ஏற்றினார்.முதல் நாளான இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் கிடையாது. இன்றுமுதலே பக்தர்கள் பதினெட்டாம்படி ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

நாளை காலை 4.30 மணிக்கு திருக்கோயில் எழுந்தருளல், 5 மணிக்கு நடைத்திறப்பு, நிர்மால்ய தரிசனம் ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து கிழக்கு மண்டபத்தில் கணபதி ஹோமம், 5.30 மணிக்கு நெய்யாபிஷேகம், அஷ்டாபிேஷேகம் நடக்கிறது.

மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.மாலை 6.30 மணிக்குத் தீபாரதனைக்குப் பின்பு புஷ்பாபிேஷேகம், படிபூஜை ஆகியவை நடக்கின்றன.இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

ஏப்ரல் 19-ம் தேதி திருநடை அடைக்கப்படும். நிறைவுநாளில் விஷூ பூஜை, மேடமாசம் பூஜை முடிந்து இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். இதில் 15-ம் தேதி, காலை 4 மணிமுதல் 7 மணிவரை விஷூ கனி தரிசனம் நடைபெறும்.

அன்றைய நாளில் தந்திரியும், மேல்சாந்தியும் இணைந்து பக்தர்களுக்கு கைநீட்டம் என்னும் பெயரில் காசு கொடுத்து புதுவருடத்தை வரவேற்கின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை தேவசம்போர்டு நிர்வாகிகள் செய்துள்ளனர்.

அடுத்த செய்தி