ஆப்நகரம்

தொழிலாளியை மிதித்து கொன்ற யானை... மேகமலையில் பயங்கரம்!

தேயிலைத் தோட்ட தொழிலாளியை யானை மிதித்து கொன்ற சம்பவம், மேகமலை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Dec 2020, 9:28 pm
தேனி மாவட்டம், மேகமலை மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். மேகமலை, மணலாறு, வெண்ணியாறு, ஹைவேவிஸ், இரவங்கலாறு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தேயிலை தோட்டங்கள் மற்றும் ஏலத்தோட்டங்கள், காபி எஸ்டேட்டில் இவர்கள் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.
Samayam Tamil மேகமலை - தேனி
தேனி மாவட்டம், மேகமலையில் யானை தாக்கியதில் முதியவர் சாவு


மேகமலை பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வலம் வருகின்றன. பெரும்பாலும் இவை அங்குள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு எந்த தொந்தரவும் தருவதில்லை.

ஆனால் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் ஒற்றை யானை ஒன்று புதிதாக சுற்றி வருகிறது. கடந்த மாதம் 60 வயது முதியவரை அடித்து கொன்ற நிலையில் நேற்று நள்ளிரவு தொழிலாளிகள் வசித்துவரும் லைன் வீடுகளில் ஒற்றை யானை ஒரு வீட்டினை சேதப்படுத்திக் கொண்டிருந்தது. அப்போது முத்தையா (52) என்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளி தனது வீட்டின் கதவைத் திறந்து பார்த்துள்ளார்.

பீர் பாட்டிலால் பஸ் கண்ணாடி உடைப்பு... ரெண்டு பேருக்கு ஏழு வருஷம் ஜெயில்!

இவர் கதவைத் திறந்து வெளியே வந்த சத்தத்தைக் கேட்ட யானை, முத்தையாவின் வீட்டு வாசலில் வைத்தே அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் குடல் சரிந்து உயிரிழந்தார்.

அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து முத்தையாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கம்பம் கிழக்கு வனச்சரகர் கர்ணன் தலைமையிலான வனத் துறையினர், ஹைவேவிஸ் காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் பெயரில் 2 கோடி ருபாய் வங்கி கடன்... மோசடி பேர்வழியை கண்டும் காணாத போலீஸ்!

ஒரே வாரத்தில் இரண்டு நபர்களை யானை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த யானையை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று உயிரிழந்த முத்தையா, தேனி மாவட்டம்,தேனி ஊராட்சிக்குட்பட்ட சீலையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் மேகமலையில் பல ஆண்டுகளாக தேயிலைத் தோட்ட நிரந்தரத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி