ஆப்நகரம்

டிக்டாக்கில் தொடங்கி நெருக்கமான வீடியோ கால்: திருமணமான தேனி பெண் ஆபாசமாகச் சித்தரிப்பாம்!

இணையதளத்தில் கைவண்ணம் காட்டிய தஞ்சாவூர் பெயிண்டர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணை ஆபாசமாகச் சித்தரித்ததால் சைபர் க்ரைம் போலீசார் அலேக்காக தூக்கிச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 15 Aug 2021, 11:48 am
தேனி மாவட்டம் கம்பம் நந்தனார் காலணி பகுதியைச் சேர்ந்தவர் 33 வயதுடைய பெண். திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 8 ஆண்டுகளாக தனியே வசித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் டப் ஸ்மேஷ் போன்ற வீடியோக்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளார்.
Samayam Tamil டிக்டாக்கில் தொடங்கி நெருக்கமான வீடியோ கால்: திருமணமான தேனி பெண் ஆபாசமாகச் சித்தரிப்பாம்!


இந்தச்சூழலில் தனது வீடியோக்களை ஆபாசமாகச் சித்தரித்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, தன்னை மிரட்டி வருவதாகத் தர்மா என்பவர் மீது குறிப்பிட்ட பெண் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், “டிக்டாக் செயலியை அரசு தடை செய்வதற்கு முன் பொழுதுபோக்கிற்காகத் தனது வீடியோவை அதில் பதிவிடும் வழக்கம் எனக்கிருந்தது. அப்போது தஞ்சாவூரைச் சேர்ந்த பெயிண்டர் தர்மா(35) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக இருவரும் ஒரு வருடத்திற்கு மேலாகப் பழகி வந்த நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.

விவசாய நிலப்பரப்பை அதிகரிக்க அரசுக்கு தேனி விவசாயிகள் செம ஐடியா!
இந்த நிலையில் நெருங்கிய நண்பர்களாக நாங்கள் இருவரும் பழகி வந்த போது வாட்ஸ் அப் வீடியோ கால் மூலமாக, நான் பேசிய வீடியோக்களை தற்போது ஆபாசமாகச் சித்தரித்து அதனை சமூக வலைதளங்களில் தர்மா வெளியிட்டுள்ளார். மேலும் என்னைத் தரக்குறைவாகவும், ஆபாசமாக பேசியும் மிரட்டல் விடுகிறார்” எனக் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து விசாரணை நடத்திய தேனி சைபர் க்ரைம் போலீசார், பெண்ணின் வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட தர்மாவைக் கைது செய்து தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த பெண்ணின் வீடியோக்களையும் அழித்து நடவடிக்கை மேற்கொண்டனர். டிக்டாக் மூலம் பழகிய பெண்ணின் வீடியோக்களை ஆபாசமாகச் சித்தரித்து வெளியிட்ட சம்பவம் தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி