ஆப்நகரம்

நெல்லை சிறையில் இறந்தவர் உடலை வாங்கவில்லை என்றால்... ஐகோர்ட் மதுரை கிளை எச்சரிக்கை!

திருநெல்வேலி சிறையில் கொல்லப்பட்ட கைதியின் உடலைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அடக்கம் செய்ய அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

Samayam Tamil 23 Jun 2021, 8:06 pm
திருநெல்வேலி மாவட்டம் வாகைக்குளம் பாவநாசம் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்:
Samayam Tamil நெல்லை சிறையில் இறந்தவர் உடலை வாங்கவில்லை என்றால்... ஐகோர்ட் மதுரை கிளை எச்சரிக்கை!

என் மகன் முத்து மனோ. வயது 27. இவரை ஒரு வழக்கில் போலீசார் கைது செய்து கொண்டு போய் நெல்லை மத்தியச் சிறை வளாகத்தில் ஏப்ரல் 22ஆம் தேதி அடைத்தனர்.

அங்கு சில கைதிகள், சிறை அதிகாரிகள், சிறைக் காவலர்கள், முத்துமனோவை தாக்கி கொலை செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் உரிய விசாரணை நடத்த வேண்டும். இதற்கிடையே 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஏற்கனவே பல முறை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, முத்துமனோ உடலைப் பெற்றுக் கொள்ள உத்தரவிட்டிருந்தது. ஆனால், முத்துமனோவின் தந்தை அதை ஏற்கவில்லை.

காம வெறிப்பிடித்த போலீஸ் கணவர்: முன்னாள் அமைச்சர் பெயரை வைத்து மிரட்டல், மதுரையில் அதிர வைக்கும் புகார்!
இந்த சூழலில் நீதிபதிகள் டிஎஸ் சிவஞானம், எஸ் ஆனந்தி அமர்வு இந்த வழக்கை நேற்று விசாரித்தது. காணொலியில் பாவநாசம் ஆஜரானார். அப்போது நீதிபதிகள், “நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து உடலைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அடக்கம் செய்ய அரசு தரப்பு நடவடிக்கை எடுக்க, உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” எனக் கூறி, ஜூன் 29க்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

அடுத்த செய்தி