ஆப்நகரம்

கொந்தளித்த விவசாயிகள்: தேனியில் மட்டும் 8 இடங்களில் போராட்டம், 300க்கும் மேற்பட்டோர் கைது!

பஞ்சாப் மாநிலத்தில் உயிரை வெறுத்து ரயில் தண்டவாளத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி, 3 வேளான் மசோதாக்களுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் சூழலில், தேனியில் மட்டும் ஒரே நாளில் 8 இடங்களில் போராட்டம்...

Samayam Tamil 26 Sep 2020, 6:03 pm
மத்திய பாஜக அரசு சமீபத்தில் கொண்உ வந்த 3 வேளாண் மசோதாக்களுக்கு நாடு முழுவதிலிமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அனைத்து மாநில விவசாயிகளும் தெருவில் இறங்கி இதுதான் தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதற்கு ஒரே வழி எனப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
Samayam Tamil கொந்தளித்த விவசாயிகள், தேனியில் மட்டும் 8 இடங்களில் போராட்டம்!
கொந்தளித்த விவசாயிகள், தேனியில் மட்டும் 8 இடங்களில் போராட்டம்!


இந்த சூழலில் தேனி மாவட்டத்தில் கம்பம், கோம்பை, சின்னமனூர், போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு என 8 இடங்களில் விவசாயிகள் சாலையை மறித்து பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களைத் திரும்பப் பெற வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயச் சங்கங்கள், எஸ்யுசிஐ விவசாயச் சங்கம், காங்கிரஸ், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியினர் உள்படப் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் பாஜகவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

தேனி மாவட்டத்தில் 8 இடங்களில் நடந்த இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 340க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்தவர்களைத் தனியார் மண்டபங்களில் அடைத்து வைத்த போலீசார் மாலை அனைவரையும் விடுவித்தனர்.

நதியில் குப்பை போட்டால் உரிமம் ரத்து, அதிரடி உத்தரவு!

தேனியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்னதாக பள்ளிவாசல் தெருவிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு நேரு சிலை வரை சென்றனர். நேரு சிலை அருகே 41 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் 5 பேர் பெண்கள்.

இதேபோல் கம்பத்தில் 53 பேர், கடமலைக்குண்டில் 16 பேர், பெரியகுளத்தில் 39 பேர், போடியில் 42 பேர் என மொத்தம் 349 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக இப்போது கொண்டு வந்துள்ள வேளாண் சார்ந்த 3 மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கூடாது எனத் தேனி மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி