ஆப்நகரம்

தேனியில் கொடூர கணவன் கைது - பட்டப்பகலில் மனைவியை கடுமையாக தாக்கி சித்ரவதை...

தேனி அருகே பட்டப் பகலில் மனைவியை சாலையில் வைத்து மயக்கம் போட்டு விழும் வரை கணவன் அடித்து கொடுமைப்படுத்தும் பரபரப்பு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written byபிரபாகர் B | Samayam Tamil 23 Apr 2023, 7:09 am

ஹைலைட்ஸ்:

  • மனைவியை அடித்து துன்புறுத்திய கணவன்
  • வீடியோ வெளியானதால் இளைஞர் கைது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil theni husband attack wife
theni husband attack wife
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரின் தங்கை சிவனம்மாள். மாரியப்பன் தனது தங்கை சிவனம்மாளை அதே ஊரைச் சேர்ந்த சுருளிராஜ் என்பவரின் மகன் கருப்பசாமிக்கு (30) திருமணம் முடித்து வைத்துள்ளார்.
கருத்து வேறுபாட்டால் சண்டை

கருப்பசாமி சிவனம்மாள் தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. கருப்பசாமிக்கும் சிவனமாவளுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை வந்ததாக தெரிகிறது. இந்த சமயத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதிகப்படியான சண்டை நடந்ததால் சிவனம்மாள் கணவனிடம் கோபித்து கொண்டு தனது குழந்தைகளுடன் அதே ஊரில் வசிக்கும் தனது அண்ணனான மாரியப்பன் வீட்டிற்கு வந்து அங்கு தங்கியுள்ளார்.
மதுரையில் போலி மருத்துவர் கைது: முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் - உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்
மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்

கடந்த மூன்று மாதமாக அண்ணன் வீட்டில் தங்கியுள்ள மனைவி மேல் ஆத்திரம் கொண்ட கணவன் கருப்பசாமி அவரது மனைவியை மாரியப்பன் வீட்டில் இருந்து வெளியில் தரதரவென இழுத்து வந்தார். பின்னர் தேனி- சுருளி அருவி செல்லும் சாலையில் வைத்து கடுமையாக தாக்கினார்.

முகத்திலேயே தொடர்ந்து தாக்கியதால் சிவனம்மாள் நிலை குலைந்தார். இதனையடுத்து, அடி தாங்க முடியாமல் அவர் மயக்கம் போட்டு சாலையிலேயே விழுந்தார். அப்போதும், கருப்பசாமிக்கு ஆத்திரம் அடங்கவில்லை. மயங்கி விழுந்த பின்னரும் சின்னம்மாளை கடுமையாக தாக்கினார்.

கொடூர கணவன் கைது

இதனை தடுக்கச் சென்ற பொதுமக்களையும் கொன்றுவிடுவேன் என கருப்பசாமி மிரட்டி இருக்கிறார். மேலும் இந்த சம்பவத்தை அருகில் இருந்த பொதுமக்கள் தங்கள் கைப்பேசியில் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர்.

தற்போது இந்த வீடியோவானது அப்பகுதியில் வைரலாக பரவி வருவதை அறிந்த காவல்துறையினர் வீடியோவை ஆதாரமாக வைத்து கருப்பசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கருப்பசாமியின் தாக்குதலில் அதிகப்படியான காயங்கள் ஏற்பட்ட சிவனம்மாள் தேனி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார்.
எழுத்தாளர் பற்றி
பிரபாகர் B
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவன். ஊடகத்துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். எழுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எனது கருத்து. தற்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி