ஆப்நகரம்

ஓபிஎஸ் தான் அடுத்த முதல்வர்! சென்னையில் ஆலோசனை, தேனியில் போஸ்டர்கள்..!

தமிழகத்தின் அடுத்த நிரந்தர முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தான் என்று தேனி மாவட்டம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவதால் தேனி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 15 Aug 2020, 3:22 pm
தமிழகத்தில் தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பின்பாக தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ஆட்சி நடந்து வரும் சூழ்நிலையில் இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
Samayam Tamil ops


இந்நிலையில், பல்வேறு கட்சியினர் தங்களது தேர்தல் பணிகளை செயல்படுத்துவதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் அடுத்த முதல்வராக 2021 நிரந்தர முதல்வராக ஓ பன்னீர்செல்வம் தான் வருவார் என்று தங்களது ஆதரவை தெரிவிக்கும் விதமாக தேனி மாவட்டம் முழுவதும் அதிமுக கட்சி தொண்டர்களும் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் தேனி மாவட்டம் முழுவதும் தற்போது சுவரொட்டிகள் எழுப்பி தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவை பெற்ற ஒரே அரசியல் வாரிசு ஓ.பன்னீர்செல்வம் தான் என்றும் அவர்தான் வரும் 2021 தமிழக நிரந்தர முதல்வர் என்றும் போஸ்டர்களில் அச்சிட்டு தேனி மாவட்டத்தில் குறிப்பாக கொஞ்சம் பட்டி கிராம மக்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்று தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் திற்கு ஆதரவு தெரிவித்து சுவரொட்டிகளை ஒட்டி வருவதால் தேனி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிஸ்சார்ஜ் ஆகும் நேரத்தில் ஐடி ஊழியர் தற்கொலை முயற்சி..! தேனி பரபரப்பு

இந்த சூழலில், சென்னை கிரீன்வேல் சாலையில் உள்ள ஈபிஎஸ், ஓபிஎஸ் வீடுகளில் அதிமுக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வு அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பை பெரிதாக கிளப்பியுள்ளது. தற்போது வரை இரண்டு கட்டமாக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், சட்டசபை தேர்தல் குறித்த முக்கிய அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி