ஆப்நகரம்

கர்ப்பிணி ஆன பின்பும் வரதட்சனை கொடுமை: கணவரல் தற்கொலை, தேனியில் பெரும் சோகம்!

தேனி மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை. காதல் கணவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாமியாருக்கு போலீஸ் வலைவீச்சு.

Samayam Tamil 18 Oct 2021, 11:16 pm
தேனி மாவட்டம் சின்னமனுார் அருகே மார்க்கையன்கோட்டை கிராம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பிரபாகரன். வயது 34. கோவை மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் பணி ஆற்றுகிறார். திருச்சியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
Samayam Tamil கர்ப்பிணி ஆன பின்பும் வரதட்சனை கொடுமை: கணவரல் தற்கொலை, தேனியில் பெரும் சோகம்!


இந்த நிலையில், முத்துலட்சுமி கர்ப்பம் தரித்து 3 மாதம் ஆன நிலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

ஆனால், முத்துலெட்சுமியின் தாயார் மின்னல்கொடி தனது மகள் முத்துலட்சுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும்
பெரியகுளம் சார் ஆட்சியர் விசாரணைக்கு காவல் துறையினர் பரிந்துரைத்தனர். விசாரணை மேற்கொண்ட சார் ஆட்சியர் ரிஷப், வரதட்சனை கொடுமையால் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்ததை உறுதி செய்தார்.

சாமியரிடம் கேன்சர் எண்ணெய் என மோசடி: மும்பை சென்று தேனி போலீஸ் செம ஸ்கெட்ச்!
இதைத் தொடர்ந்து கணவர் பிரபாகரனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது தாயார் பிச்சையம்மாளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

வரதட்சனை கொடுமையால் கர்ப்பிணி பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தேனி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி