ஆப்நகரம்

அரசுக்கு எதிராக அரை நிர்வாணப் போராட்டம்: தேனியில் 50பேர் குண்டு கட்டாகக் கைது!

அதிமுக-திமுக அரசுகளைக் கண்டித்து சீர்மரபினர் நலச் சங்கத்தினர் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது.

Samayam Tamil 2 Aug 2021, 7:50 pm
தமிழ்நாட்டில் உள்ள சீர்மரபினர் நலச் சங்கத்தினர் 116 சாதிகளில் ஒரு சாதியினருக்கு மட்டும் 10. 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
Samayam Tamil அரசுக்கு எதிராக அரை நிர்வாணப் போராட்டம்: தேனியில் 50பேர்க் குண்டு கட்டாகக் கைது!


தமிழ்நாடு அரசு, கடந்த சில தினங்களுக்கு முன்பு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதுமுள்ள சீர்மரபினர் நலச் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாகத் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதற்கிடையே தேர்தல் நேரத்தில் இச்சங்கத்தினர் அதிமுகவைத் தோற்கடிக்க வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து வந்தனர்.

இப்போது நடந்த போராட்டத்தில் முன்னாள் அதிமுக அரசு, இந்நாள் திமுக அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறி சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அன்பழகன் கோவணத்துடன் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தேனி அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ 26 லட்சத்தை ஆட்சியர் முரளிதரன் வழங்கினார்!
போராட்டத்தின்போது தமிழ்நாட்டில் உள்ள 115 சமூகத்தினருக்கு அதிமுகவும் திமுகவும் துரோகம் செய்துவிட்டதாக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர். அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

அடுத்த செய்தி