ஆப்நகரம்

இதுதான் லாஸ்ட் வீக் எண்ட்; தேனி கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

பள்ளிகளுக்கு விடப்பட்ட கோடை விடுமுறை முடிவடைய உள்ளதாலும், கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்கவும் கும்பக்கரை அருவியில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 4 Jun 2023, 5:45 pm

ஹைலைட்ஸ்:

  • நிறைவுக்கு வரும் பள்ளிகளின் கோடை விடுமுறை
  • வெயிலின் தாக்கத்தை தணிக்க படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
  • கும்பக்கரை அருவியில் நிரம்பி வழியும் கூட்டம்
  • வனத்துறை மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil தேனி கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தேனி கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
இயற்கை எழில் கொஞ்சும் கும்பக்கரை:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்த கோடை மழையால், நீர்வரத்து அதிகரித்து சீராக உள்ளது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் உச்சத்தைத் தொட்டு உள்ள நிலையில், கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க சுற்றுலாப்பயணிகள் நீர்நிலைகளை நாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கோடை வெப்பத்தை தணிக்க அதிக அளவில் குவிந்தனர்.


பள்ளிகளில் கோடை விடுமுறை முடிவு:

மேலும் பள்ளிகளில் கோடை விடுமுறை முடிவடைய உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குடும்பம் குடும்பமாக கோடை விடுமுறையை கொண்டாடும் விதமாகவும், கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்கவும் கும்பக்கரை அருவி சுற்றுலா பயணிகளால் அதிகளவில் சுற்றுளாப் பயணிகள் குவிந்ததால் அருவியில் காத்திருந்து குளித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்ததால் கும்பக்கரை அருவி நிரம்பி வழிகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் காத்திருந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

இனிமே கியூஆர் கோர்டு பயன்படுத்தி பஸ்சில் டிக்கெட் எடுக்கலாம்; இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கோவை..!

வனத்துறை பாதுகாப்பு:

மேலும் கும்பக்கரை அருவியில் இன்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் வழிகாட்டுதலின்படி வன ஊழியர்கள் ஏராளமானோர் சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் இடத்தில் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுக்கு வரும் கோடை விடுமுறை.. ஒகேனக்கலில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்.. மீன் விற்பனை விறுவிறு..!

சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்கும் பணி:

மேலும் இதுகுறித்து தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் கூறுகையில், கோடை வெயிலின் தாக்கத்தால் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் கும்பக்கரை அருவியை தேடி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்களை பாதுகாக்கும் விதத்தில் கும்பக்கரை அருவிப்பகுதியில் அதிகப்படியான வன ஊழியர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குறித்து மகிழ்ந்து செல்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் அருவிப் பகுதியில் குளிக்க வருகிற சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்" என தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி