ஆப்நகரம்

தடையை மீறிய பாஜக... முதல்வருக்காக வழிபாடு!

தமிழக முதலமைச்சருக்கு நல்ல சிந்தனையையும், எல்லா சமுதாயத்தையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்க கூடிய அறிவையும் கொடுக்க வேண்டும் என்று தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாஜகவினர் விநாயகரிடம் வேண்டிக்கொண்டனர்.

Samayam Tamil 11 Sep 2021, 4:38 pm
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை வைத்து அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது.
Samayam Tamil முதல்வருக்காக பாஜக சிறப்பு வழிபாடு
முதல்வருக்காக பாஜக சிறப்பு வழிபாடு


இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தடை உத்தரவை மீறி பாஜகவை சேர்ந்த மாநில நிர்வாகியும், தேனி மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான ராஜபாண்டியன் தலைமையில் பாஜகவினர் கும்பக்கரை பிரிவு சாலையில் இருந்து விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டுவர முற்பட்டனர்.

இதை அறிந்த காவல் துறையினர் விநாயகர் ஊர்வலத்தை அதே இடத்தில் தடுத்து நிறுத்தினர். மேலும் விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதற்கு அதே வாகனத்தில் கொண்டு சென்றனர்.

திமுகவை தெறிக்க விட்ட போஸ்டர்கள்; ‘குண்டாஸ்’ இருந்தா உடனே பதவியாம்!

அப்போது சில இடங்களில் விநாயகர் சிலைக்கு பாஜகவினர் மலர் தூவி கோஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விநாயகர் சிலையை காவல் துறையினர் பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வராக நதி ஆற்றங்கரைக்கு கொண்டு சென்றனர்.

வழக்கறிஞர்...பிரஸ்...போலீஸ்; தமிழக அரசுக்கு 60 நாள் கெடு!

அங்கு பாஜகவினர் விநாயக பெருமானே தமிழக முதலமைச்சருக்கு நல்ல சிந்தனையையும், எல்லா சமுதாயத்தையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடிய அறிவையும் கொடு என வேண்டிக்கொண்டு ஆற்றில் சிலையை கரைத்தனர்.

அடுத்த செய்தி