ஆப்நகரம்

தமிழ் வழியில் பயின்று 'நீட்' வென்ற தேனி மாணவர்... குவியும் பாராட்டு

இவரது தந்தை ஆடு மேய்த்து வருகிறார். தாயார் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்.

Samayam Tamil 17 Oct 2020, 9:52 pm
இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 13ஆம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வுக்காக நாடு முழுவதும் மொத்தம் அமைக்கப்பட்ட 3,842 மையங்களில் தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 13.66 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். அமல்படுத்தப்பட்டு 7 ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் தமிழக மாணவர்கள் டாப் 10 தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்ரீஜன், மோகனப் பிரபா, ஸ்வேதா ஆகியோர் முறையே 8, 52, 62 ஆவது ரேங்க்கில் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். இதே பட்டியலில் கவனிக்கப்பட வேண்டிய மாணவராக இருப்பவர் என்.ஜீவித்குமார். காரணம், தமிழகத்தின் மாநில வழிக் கல்வியில் தமிழ் வழியில் பயின்ற இந்த மாணவர் 720க்கு 664 மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

இது தேசிய அளவில் 1832ஆவது ரேங்க். எனினும், தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமான செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.



தேனி மாவட்டத்தில் உள்ள சிலுவார்ப்பட்டி மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்வழியில் படித்த மாணவர் ஜீத்குமார். இவரது தந்தை ஆடு மேய்த்து வருகிறார். தாயார் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றி வருவதாகத் தகவல். இவர் தையல் தொழில் செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஆசிரியர்களின் ஊக்கமும் உதவித்தொகையும் கிடைத்ததால் நாமக்கல்லில் உள்ள ஒரு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று வந்த இவர், முன்பே ஒரு முறை நீட் தேர்வு எழுதித் தோற்றுள்ளார். அப்போது அவர் எடுத்த மதிப்பெண்கள் 198 மட்டுமே. இது இரண்டாவது முயற்சி. இப்போது 664 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

நீட் தேர்வில் பட்டையை கிளப்பிய தமிழக மாணவர் ஸ்ரீஜன்!

மருத்துவப் படிப்பின் மீதிருந்த பெருங்காதல் இவரை இது நோக்கி உந்தியுள்ளது. தமிழ்வழியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற இந்த மாணவரைப் பாராட்டுவது ஒருபுறம் என்றால், தமிழ்வழிக் கல்வி அல்லது பிராந்திய மொழிவழிக் கல்வி பயின்ற மாணவர்களின் சிரமத்தைக் குறைக்க அரசு ஏதாவது முன்னெடுப்புகளைச் செய்யாதா என்ற கேள்வி மறுபுறம் வலுவடைந்து வருகிறது.

அடுத்த செய்தி