ஆப்நகரம்

ஏமாற்றும் போலீஸ் கருணைக் கொலை செய்ய திருநங்கை தேனி ஆட்சியரிடம் மனு!

தயவு செய்து என்னை கருணைக் கொலை செய்யுங்க என திருநங்கை ஒருவர் தேனி ஆட்சியரிடம் வைத்த கோரிக்கை அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

Samayam Tamil 30 Nov 2021, 2:35 pm
தேனி நகர் ஃபாரஸ்ட் ரோடு 6 ஆவது தெருவை சேர்ந்தவர் திருநங்கை ஆராதனா(30). பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இவர் தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரனை சந்தித்து தனக்கு காவல் துறையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையேல் கருணைக் கொலை செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என பரபரப்பான கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
Samayam Tamil ப்ளீஸ் என்ன கொன்னுடுங்க, தேனி கலெக்டரிடம் 3ஆம் பாலினத்தவர் மன்றாடல்!


இதுகுறித்து திருநங்கை ஆராதனா கூறுகையில், “2017 -2018 ஆம் ஆண்டு காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தேன். திருநங்கை என்ற காரணத்தினாலும் இட ஒதுக்கீடு இல்லாத காரணத்தினாலும் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு பெற்று காவலர்கள் தேர்வு எழுதினேன். அதில் தேர்ச்சியும் பெற்றேன். அடுத்த கட்டமாக நடத்த வேண்டிய உடல் தகுதி தேர்வு நடத்தாமல் கடந்த 5 ஆண்டு காலமாக காவலர் பணியில் சேர முடியாமல் உள்ளேன்.

செல்லும் இடமெல்லாம் கேமரா: தேனி கலெக்டர் விளம்பர பிரியரா?
குடும்பத்தார்கள் உறவினர்கள் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு ஒரு கடினமான சூழ்நிலையில் கூலிவேலை செய்து ஒரு ஓரமாக வாழ்ந்து வருகிறேன். காவலர் ஆகா வேண்டும் என்பது எனது ஆசை. தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் தனக்கு கருணைக் கொலை செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்பதை தேனி ஆட்டிச்யரிடம் தெளிவுப்படுத்தியுள்ளேன்” என ஆராதனா கூறியுள்ளார்.

அடுத்த செய்தி