ஆப்நகரம்

அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி ரெய்டு!

அதிகாரி வீட்டிற்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், செல்போனை பறித்துக் கொண்டு விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது...

Samayam Tamil 16 Sep 2020, 6:40 pm
உத்தமபாளையத்தில் உள்ள அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடியாக நுழைந்து கைப்பேசிகள் உள்ளிட்ட தொலைத் தொடர்பு சாதனங்களை முடக்கி வைத்துக் கொண்டு விசாரணை நடத்திய சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி ரெய்டு!
அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி ரெய்டு!


திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்து வருபவர் பால சுப்பிரமணி. இவர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வசித்து வருகிறார்.

பால சுப்பிரமணி ஆண்டிபட்டி, தேவாரம், பண்ணைப்புரம், குச்சனூர் உள்பட பல்வேறு பேரூராட்சிகளில் செயல் அலுவலராகப் பணி புரிந்து பணியிட மாற்றப்பட்டுள்ளார். இவர் கையூட்டு பெற்றதாகவும், அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணமிருந்தன.

இதையடுத்து இவரது வீட்டிற்குப் புதன்கிழமை காலை வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வீட்டை உட்புறமாகப் பூட்டிக் கொண்டு, உள்ளே இருந்தவர்களிடம் கைப்பேசிகளைப் பறித்துக் கொண்டுள்ளனர்.

விவசாய நிலத்தில் எண்ணெய் குழாய்கள், அரசுத் தொடர் தோல்வி!

தொடர்ந்து போலீசார் பால சுப்பிரமணியின் மனைவி, உறவினர்கள் வங்கிக் கணக்குகள், வருமான விவரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். பால சுப்பிரமணி, அவரது உறவினர்கள் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்ட தொகை குறித்து போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து வங்கிக் கணக்கு, சொத்து விவரங்கள் குறித்து தகவல் சேகரித்துவிட்டுச் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகுதான் பால சுப்பிரமணி கையூட்டு பெற்றாரா என்பது குறித்துத் தெரியவரும்.

அடுத்த செய்தி