ஆப்நகரம்

கோவில் திருவிழாவிற்கு வந்து தண்டவாளத்தில் படுத்து உறங்கிய 3 வாலிபர்கள்; செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உடல் நசுங்கி பலி.. திருவாரூரில் சோகம்!

திருவாரூர் அருகே முத்துப்பேட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை காண வந்த மூன்று வாலிபர்கள் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய நிலையில், அதிகாலையில் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 2 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.‌

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 25 Apr 2023, 1:36 pm
கோவில் திருவிழாவிற்கு வந்து தண்டவாளத்தில் படுத்து உறங்கிய 3 வாலிபர்கள்:
Samayam Tamil கோவில் திருவிழாவிற்கு வந்து தண்டவாளத்தில் படுத்து உறங்கிய 3 வாலிபர்கள்
திருவாரூர் அருகே முத்துப்பேட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை காண வந்த மூன்று வாலிபர்கள் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய நிலையில், அதிகாலையில் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 2 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.‌


முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை காண வந்த 3 வாலிபர்கள் அதிகாலை 3 மணியளவில் அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கியபோது அவ்வழியாக சென்ற தாம்பரம் - செங்கோட்டை ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே 2 வாலிபர்கள் பலியாகி, ஒரு வாலிபர் படுகாயத்துடன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரசித்தி பெற்ற உப்பூர்மாரியம்மன் கோவில் திருவிழா:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா வருடந்தேறும் சித்திரை மாதம் வெகு விமரிசையாக நடைபெறும். அதன் வகையில் இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 14ந்தேதி துவங்கியது. முக்கிய நாளான 10ம் நாள் நேற்றிரவு காவடி எடுத்தல், சாமி வீதி உலா நிகழ்ச்சிக்கள் விடிவிய நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உடல் நசுங்கி பலி:

இந்தநிலையில் திருவிழாவை காணவந்த உப்பூர் மெயின் ரோட்டை சேர்ந்த முருகதாஸ் மகன் அருள்குமார் (17), கோபாலசமுத்திரம் கந்தசாமி மகன் பரத்குமார் (17), நாகை மாவட்டம், மேலமருதூர், தெற்கு பிடாரி கிராமத்தை சேர்ந்த முருகையன் முருகபாண்டியன் (24) ஆகிய 3 வாலிபர்கள் காவடி ஊர்வலத்தில் கலந்துக்கொண்டதால் சோர்வு ஏற்பட்ட நிலையில், அருகில் இந்த ரயில்வே தண்டாவளத்தில் தூங்கிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அதிகாலை சுமார் 3 மணியளவில் தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மூவர் மீதும் மோதியது.

சிறுவாணி தடுப்பணை விவகாரம்: கோவையில் நாளை கேரள பேருந்துகளை சிறைபிடித்து அனைத்து கட்சிகள் போராட்டம் அறிவிப்பு!

திருவாரூரில் சோகம்:

இதில் அருள் தலை துண்டித்தும், முருக பாண்டியன் உடலில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பரத்குமார் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்கப்பட்டு ஆபாத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெருந்துறையில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; பின்னணி என்ன?.. ஆர்டிஓ விசாரணை..!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், போலீசார் மற்றும் திருவாரூர் ரயில்வே இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். கோவில் திருவிழாவின்போது நடந்த இந்த துயர சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி