ஆப்நகரம்

10 % கூடுதல் குடும்ப ஓய்வூதியம்... வெளியானது சூப்பர் தகவல்!

தமிழகத்தில் ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக சூப்பரான தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 16 Feb 2022, 6:56 pm
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் பதவிக் காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் புதிதாக உருவான 9 மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
Samayam Tamil ஓய்வூதியர் சங்கத்தினர் பேட்டி
ஓய்வூதியர் சங்கத்தினர் பேட்டி



இதனை தொடர்ந்து நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

கோபத்தின் உச்சியில் அதிமுக; ராஜேந்திர பாலாஜி புது கலகம்!

இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என, 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28ம் தேதி தொடங்கிய நிலையில் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதி நடக்கிறது. இதை தொடர்ந்து தேர்தல் பணியில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கியுள்ளன.

அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி; உடனே செயல்படுத்த வந்தது திடீர் கோரிக்கை!

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னர்குடியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க 57வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் மாணிக்கம், மாநில பொதுச் செயலாளர் முத்துகுமாரவேல் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முத்துகுமாரவேல் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

ஆசிரியர்களுக்கு திடீர் சிக்கல்; முதல்வர் தலையிட கோரிக்கை!

தமிழக முதலமைச்சர் 70 வயது முடிவடைந்த ஓய்வூதியர்களுக்கு மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் குடும்ப ஓய்வூதியம் கூடுதலாக வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை அளித்து இருந்தார்.

அதனை விரைவில் நிறைவேற்றி 70 வயது முதல் 79 வயது உள்ளவர்களுக்கு 10% ஓய்வூதியத்தை ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு தமிழக முதல்வர் வழங்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முத்துகுமாரவேல் கூறினார்.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்