ஆப்நகரம்

தந்தை மறைவு; தேர்வுக்கு சென்ற மகன்; லட்சியத்தை அடையத் துடிக்கும்.. ரத்தம்!

தந்தை திடீரென மறைந்த நிலையில் மகன் தேர்வு எழுத சென்ற சம்பவம் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Samayam Tamil 24 May 2022, 8:07 pm
Samayam Tamil பலியானவர்களின் உறவினர்கள்
பலியானவர்களின் உறவினர்கள்
திருவாருர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த கானூர் பருத்திக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் ப்ரித்திகேசன். தந்தை ஜெயராஜ் விவசாய கூலி தொழிலாளி. நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று தந்தை ஜெயராஜ் மகன் ப்ரித்திகேசனிடம் அடிக்கடி கூறுவது வழக்கம்.

அந்தவகையில் ஏழை குடும்பத்தை சேர்ந்த ப்ரித்திகேசன் தற்போது 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை எழுதி வருகிறார். குடும்ப வறுமைநிலை காரணமாகவும், தனது தந்தையின் கடின உழைப்பை பலனுள்ள வகையில் மாற்றவும் ப்ரித்திகேசன் லட்சியத்துடன் படித்து வருகிறார்.

தற்போது அரசு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில் ப்ரித்திகேசன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற கனவில் இரவு பகல் பாராமல் படித்து, தேர்வு எழுதி வருகிறார்.

இத்தகைய சூழலில் மாணவன் ப்ரித்திகேசன் தந்தை ஜெயராஜ் உடல்நல குறைவு காரணமாக அதிகாலை உயிரிழந்தார். தனது தந்தை இறந்த சோகத்தை மனதில் புதைத்துக்கொண்டு ப்ரித்திகேசன் இன்று தனது தேர்வு அறைக்கு சென்று 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை எழுதினார்.

மாணவனின் இத்தகைய குடும்ப பொறுப்பு மற்றும் லட்சிய உணர்வை பார்த்ததும் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ப்ரித்திகேசன் செயலை வியந்து வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கட்டிப் போடப்பட்ட பெண்; கூட்டு சேர்ந்து சித்தரவதை!

இதுகுறித்து உறவினர்கள் சிலர் கூறியதாவது:

தந்தை ஜெயராஜ் பட்ட கஷ்டத்தை நேரில் பார்த்து வளர்ந்ததால் ப்ரித்திகேசனுக்கு குடும்ப பொறுப்பு அதிகம் உள்ளது. எப்படியாவது படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று மகனுக்கு ஜெயராஜ் சொலிக்கொண்டே இருப்பார்.

அதேப்போல் மகன் ப்ரித்திகேசன் படிப்பு தடைபடக் கூடாது என்பதற்காக கூலி வேலைக்கு சென்று ராத்திரி பகலா ஜெயராஜ் பாடுபட்டு வந்தார். இந்நிலையில் மகன் அரசு தேர்வு எழுதிக்கொண்டு இருக்கும்போதே இறந்துட்டார்.

தந்தையின் மறைவு குறித்த சோகம் ஒருபுறம் இருந்தாலும் அதை மனதில் அடக்கிக்கொண்டு தந்தையின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் தேர்வு எழுதி இருப்பது ரொம்ப நெகிழ்ச்சியை தருகிறது. இவ்வாறு உறவினர்கள் கூறினர்.

அடுத்த செய்தி