திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் கடைத்தெரு உள்ளது. அந்த பகுதியில் இருக்கும் சாலை பிரதான சாலையாக பயன்பட்டு வருகிறது. அது பிரதான சாலை என்பதால் கார், பைக் போன்ற வாகனமும் லாரி போன்ற கனரக வாகனங்களும் அந்த சாலை வழியாக சென்று வருவது வாடிக்கை. மேலும் அங்கு பெரும்பாலான கடைகள் உள்ளதால் மக்கள் நடமாட்டமும் அதிகமாகவே இருக்கும்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அதனாலேயே அந்த கடை தெருவில் அடிக்கடி சாலை விபத்து நடைபெற்று கொண்டுள்ளது. அதனை தடுக்கும் விதமாக கச்சனம் வர்த்தகர்கள் சங்கம் சார்பாக அப்பகுதியில் சிசிடிவி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை பாமந்தூர் பகுதியை சேர்ந்த வேதையன் (48) என்பவர் திருப்புவளையில் இருந்து திருவாரூர் சென்றுள்ளார். அதே சமயத்தில் திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி கார் ஒன்று வந்துள்ளது.
சரியாக அந்த கார் கச்சனம் கடை தெரு பகுதியில் பிரதான சாலையில் வந்து கொண்டிருந்தபோது, காரின் குறுக்கே இருசக்கர வாகனத்தில் வந்த வேதையன் கார் மீது மோதியுள்ளார். எதிர்பாராத விதமாக நடைபெற்ற இந்த விபத்தில் கார் மோதியதும் வேதையன் தூக்கி வீசப்பட்டார்.
அதனை கண்ட அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பலத்த காயம் அடைந்த வேதையனை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து விபத்து சம்பவம் குறித்து ஆலிவலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் அந்த இடத்தை ஆய்வு செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சி பதிவுகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், பிரதான சாலையில் கார் ஒன்று வருவதும், அதே சமயத்தில் வேதையன் இருசக்கர வாகனத்தில் வந்து சாலையை கடக்க முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக கார் மீது மோதி அவர் தூக்கி வீசப்படும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.
இதுபோன்ற விபத்துக்கள் அந்த கச்சனம் கடை தெருவில் அடிக்கடி நடைபெறுவதற்கு அங்கு வேகத்தடை அமைக்காதது தான் காரணம் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் நெடுஞ்சாலை துறை மீது குற்றம் சாட்டுகின்றனர். இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க அந்தப் பகுதியில் விரைவில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அதனாலேயே அந்த கடை தெருவில் அடிக்கடி சாலை விபத்து நடைபெற்று கொண்டுள்ளது. அதனை தடுக்கும் விதமாக கச்சனம் வர்த்தகர்கள் சங்கம் சார்பாக அப்பகுதியில் சிசிடிவி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை பாமந்தூர் பகுதியை சேர்ந்த வேதையன் (48) என்பவர் திருப்புவளையில் இருந்து திருவாரூர் சென்றுள்ளார். அதே சமயத்தில் திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி கார் ஒன்று வந்துள்ளது.
சரியாக அந்த கார் கச்சனம் கடை தெரு பகுதியில் பிரதான சாலையில் வந்து கொண்டிருந்தபோது, காரின் குறுக்கே இருசக்கர வாகனத்தில் வந்த வேதையன் கார் மீது மோதியுள்ளார். எதிர்பாராத விதமாக நடைபெற்ற இந்த விபத்தில் கார் மோதியதும் வேதையன் தூக்கி வீசப்பட்டார்.
அதனை கண்ட அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பலத்த காயம் அடைந்த வேதையனை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து விபத்து சம்பவம் குறித்து ஆலிவலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் அந்த இடத்தை ஆய்வு செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சி பதிவுகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், பிரதான சாலையில் கார் ஒன்று வருவதும், அதே சமயத்தில் வேதையன் இருசக்கர வாகனத்தில் வந்து சாலையை கடக்க முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக கார் மீது மோதி அவர் தூக்கி வீசப்படும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.
இதுபோன்ற விபத்துக்கள் அந்த கச்சனம் கடை தெருவில் அடிக்கடி நடைபெறுவதற்கு அங்கு வேகத்தடை அமைக்காதது தான் காரணம் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் நெடுஞ்சாலை துறை மீது குற்றம் சாட்டுகின்றனர். இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க அந்தப் பகுதியில் விரைவில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.