ஆப்நகரம்

பாஜகவுக்கு சீட்டே இல்லை போங்க...முகத்தில் குத்திய அதிமுக!

பாஜகவுக்கு ஒரு சீட் கூட இல்லை என அதிமுக அதிரடியாக அறிவித்துள்ளது. இதை தொண்டர்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

Samayam Tamil 28 Jan 2022, 10:20 pm
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் பதவிக் காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் புதிதாக உருவான 9 மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
Samayam Tamil கமலாலயம்
கமலாலயம்



இதனை தொடர்ந்து நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

ஆடிப்போய் கிடக்கும் அதிமுக; பீதி கிளப்பிய டெல்லி உத்தரவு!

இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

பாஜக அண்ணாமலை டபுள் கேம்; வெளிச்சம் போட்ட அதிமுக!

இதையடுத்து அந்தந்த கட்சிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது. அந்தவகையில் அதிமுக சார்பாக வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி நாகை அதிமுக கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்கள் நேர்காணல் இன்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சரரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது.

ஒரே நாளில் இறந்த முதியவர்கள் எண்ணிக்கை.. பீதியில் உறைந்த மக்கள்!

இதில் நாகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளை சேர்ந்த அதிமுக வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். நேர்காணலுக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது:

நாகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் ஒரு வார்டுகளில் கூட போட்டியிடுவதற்கு பாஜக அதிமுகவை நாடவில்லை. ஆகவே 36 வார்டுகளில் அதிமுக நேரடியாக களம் காண இருக்கிறது.

தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு; டிக்கெட் பிரச்சனை தீர்ந்தது!

பாஜக நயினார் நாகேந்திரன் அதிமுகவை விமர்சித்து பேசியது கண்டிக்கத்தக்கது. இது, நாகரீகமான அரசியல்வாதி பேசக்கூடிய வார்த்தை இல்லை. இவ்வாறு முன்னாள் அமைச்சரரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் கூறினார்.

அதிமுகவைத் தொடர்ந்து பாஜக ஏளனம் செய்து வரும் நிலையில், உள்ளாட்சி தேர்தலில் நாகை நகராட்சியில் பாஜகவுக்கு ஒரு சீட் கூட இல்லை என்று முன்னாள் அமைச்சர் அறிவித்திருப்பதை தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

அடுத்த செய்தி