அதன்படி அந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதாவது இந்த 9 மாவட்டங்களில் அக்டோபர் 6ம் தேதி மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கலும் முடிவடைந்து, தேர்தல் பிரச்சாரம் களைகட்டி உள்ளது.
அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆகிய பதவிகளுக்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பு பணிகளில் அதிமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர் .
இழுத்து பிடிச்சு ஊசி போடுவாங்களா?; மக்களை பீதியில் ஆழ்த்திய அமைச்சர்!
இதன் ஒரு பகுதியாக திருவாரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிவாரமங்களம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சாவித்திரியை ஆதரித்து அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், முன்னாள் உணவுத்துறை அமைச்சருமான காமராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசியதாவது:
இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற அனைத்து நிர்வாகிகளும் கடுமையாக பாடுபட வேண்டும். திமுக அறிவித்திருந்த தனது தேர்தல் வாக்குறுதியான விவசாய கடன் தள்ளுபடியை நிறைவேற்ற முடியவில்லை. அதில், ஏராளமான நிபந்தனைகளை விதித்துள்ளனர். இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திமுகன்னா ஆச..தோச..அப்பள வடை தான்; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சரவெடி!
மேலும் குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கவில்லை. இவற்றை எல்லாம் எடுத்து கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். தற்போது 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. இவ்வாறு முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
பொய் சொல்லி ஏமாற்றும் திமுக அரசு; புகார் வாசிக்கும் முன்னாள் அமைச்சர்!
இந்நிகழ்ச்சியில் திருவாரூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பி.கே.யு. மணிகண்டன், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் செந்தில் குமார் மற்றும் முக்கிய கழக நிர்வாகிகள், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.