ஆப்நகரம்

தானியங்கள் மூலம் தேசிய கொடி; சீர்காழி இளைஞர் ‘உலக சாதனை’!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உலக சாதனை முயற்சியாக 24418 மூவர்ண தானியங்களை கொண்டு இளைஞர் ஒருவர் தேசிய கொடியை வடிவமைத்தார். அந்த இளைஞருக்கு சுதந்திர தின விழாவில் சான்றிதழ் மற்றும் விருதினை வழங்கி வட்டாட்சியர் பாராட்டு தெரிவித்தார்.

Samayam Tamil 15 Aug 2021, 6:46 pm
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரத்தை சேர்ந்த இளைஞர் கீர்த்திவாசன். சமூக ஆர்வலரான இவர், Blood Donars Association என்கின்ற இரத்த தான சேவை மையத்தையும் நடத்தி வருகிறார்.
Samayam Tamil சுதந்திர தின விழா கொண்டாட்டம்
சுதந்திர தின விழா கொண்டாட்டம்


இந்நிலையில் நாட்டின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக சாதனை முயற்சியாக தானியங்களை பயன்படுத்தி இந்திய தேசிய கொடியை உருவாக்கியுள்ளார்.

இதற்காக 24,418 ஆரஞ்சு மற்றும் வெள்ளை சோள விதைகள் மற்றும் பச்சை பயிறை பயன்படுத்தி 73.1 x 33.5 cm அளவில் இந்திய தேசிய கொடியை 3 மணி நேரம் 23 நிமிடங்கள் 21 நொடிகளில் உருவாக்கியுள்ளார்.

சீர்காழி இளைஞரின் இந்த முயற்சியை JACKHI BOOK OF WORLD RECORDS அமைப்பு புதிய உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.

100 நாட்களில் திமுக அரசு சாதனை; பாஜக முன்னாள் அமைச்சர் சான்று!

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் விருதுகளை சீர்காழி வட்டாட்சியர் சண்முகம் கீர்த்திவாசனிடம் வழங்கி பாராட்டினார்.

அடுத்த செய்தி