ஆப்நகரம்

உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு நிச்சயம் வெற்றி பெறும் - அடித்து சொன்ன கி. வீரமணி..!

ன் மசாலா, குட்கா ஆகியவற்றுக்கு விதித்த தடையை ரத்து செய்த உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து மேல்முறையீடு செய்தால் தமிழ்நாடு அரசு வெற்றி பெறும் என திருவாரூரில் திராவிட கழக தலைவர் கி. வீரமணி அதிரடி பேட்டியளித்துள்ளார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 28 Jan 2023, 7:03 pm

ஹைலைட்ஸ்:

  • நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வெற்றி பெறும்
  • கருத்து சுதந்திரத்தை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை.
  • உண்மையைக் கண்டு யாரும் உடம்பு எரிச்சல் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என கி. வீரமணி அதிரடி பேட்டி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil திராவிட கழக தலைவர் கி. வீரமணி
ன் மசாலா, குட்கா ஆகியவற்றுக்கு விதித்த தடையை ரத்து செய்த உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து மேல்முறையீடு செய்தால் தமிழ்நாடு அரசு வெற்றி பெறும் என திருவாரூரில் திராவிட கழக தலைவர் கி. வீரமணி அதிரடி பேட்டியளித்துள்ளார்.
நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வெற்றி பெறும். கருத்து சுதந்திரத்தை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. உண்மையைக் கண்டு யாரும் உடம்பு எரிச்சல் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என திருவாரூரில் திராவிட கழக தலைவர் கி. வீரமணி அதிரடி பேட்டியளித்துள்ளார்.
திருவாரூர் அருகே மஞ்சக்குடி பகுதியில் தந்தை பெரியாரின் பெருந்தொண்டர் மறைந்த சிவானந்தம் இல்ல திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது, பான் மசாலா, குட்கா ஆகியவற்றுக்கு விதித்த தடையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து கேட்டபோது, இது ஒரு சட்ட பிரச்சனை. இந்த சட்ட பிரச்சனைக்கு உடனடியாக அந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வெற்றி பெறும். அதையும் தாண்டி வேறு விதமாக ஏதாவது நடந்தால் சட்ட திருத்தம் வரும்.


இந்த நாட்டில் ஏராளமான இளைஞர்கள் போதையால் கெடுகிறார்கள். சட்டத்தில் இருக்கும் சந்து, பொந்துகளை பயன்படுத்திக் கொண்டு போதை வஸ்துகளை பரப்பலாம் என்று நினைப்பது ஒழுக்க கண்ணோட்டத்திலும் தவறு, சட்ட பிரச்சனையிலும் தவறு, சமூக ரீதியாகவும் தவறு. சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள் அடைக்கப்படும். சமூக விரோதிகள் தடுக்கப்படுவார்கள்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தொடர்ந்து பிரதமர் மோடியை பற்றிய பிபிசி வெளியிட்ட காணொளியை பார்க்க கூடாது என்று தடை விதித்தது பற்றி கேட்டபோது, பிபிசி என்பது ஒரு சுதந்திரமான நிறுவனம். அது யாரைப் பற்றியும் கவலைப்படாது. இங்கிலாந்து நாட்டு பிரதமருக்கு அபராதம் விதிக்கும் வகையில் செயல்பட்டது பிபிசி. இங்கிலாந்து நாட்டை பொருத்தவரை சட்டம் ஒழுங்கு காப்பாற்றுவார்கள். அந்த நாட்டு அரசாங்கம் கூட பிபிசியில் தலையிட முடியாத அளவுக்கு சுதந்திரமான அமைப்பு பிபிசி.

புதுச்சேரி ஜி 20 மாநாடு: நாளை முதல் ஐந்து இடங்களில் 144 தடை உத்தரவு.. கலெக்டர் அதிரடி அறிவிப்பு..!

அவருடைய கருத்தை சொல்கிறார்கள். அதை தடுப்பது தவறு என்று ஏற்கனவே கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறேன் . கருத்து சுதந்திரத்தை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. உலகம் முழுவதிலும் இந்த செய்தி பரவி இருக்கிறது. உண்மையைக் கண்டு யாரும் உடம்பு எரிச்சல் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி