ஆப்நகரம்

மன்னார்குடி ஏழை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்... திரளான பக்தர்கள் பங்கேற்பு!

மன்னார்குடி ஏழை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 23 Jun 2022, 4:07 pm

ஹைலைட்ஸ்:

  • மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஏழை மாரியம்மன் கோவில்
  • இக்கோவிலின் திருப்பணி வேலைகள் நிறைவு செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேகம்
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ஏழை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மன்னார்குடி கணக்கன் தெரு பழமை வாய்ந்த ஏழை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.‌
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது ஏழை மாரியம்மன் கோவில். மன்னார்குடியின் புகழ்பெற்ற பழமை வாய்ந்த இக்கோவிலின் திருப்பணி வேலைகள் நிறைவு செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயங்கி விழுந்த திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்... மக்கள் நேர்காணல் முகாமில் பரபரப்பு!

இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தவுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலவர் விமானம் மற்றும் பரிவார தெய்வங்களின் விமானம் ஆகியவற்றிற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் விநாயகர், துர்க்கை, ஏழை மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. கும்பாபிஷேகத்தில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி