ஆப்நகரம்

மேகதாது அணை விவகாரம்: டெல்டா மாவட்டங்களில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு!

மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 22 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என‌ அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மாநிலத் தலைவர் லாசர் தெரிவித்துள்ளார்.

Curated bySrini Vasan | Samayam Tamil 20 Jun 2022, 4:01 pm
திருவாரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் லாசர் தெரிவித்ததாவது.
Samayam Tamil மேகதாது அணை


மேகதாது விவகாரம் மத்திய அரசு மற்றும் நீதிமன்ற நடவடிக்கையின் கீழ் உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மேகதாது விவகாரம் பற்றி விவாதிக்க அதிகாரம் இல்லை. சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அமர்ந்து பேசி நல்ல தீர்வு எடுக்க வேண்டும்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேகதாது பற்றி காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிப்போம் என்று ஆணையர் தெரிவித்து இருப்பதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புக் எழுந்துள்ளது. வரும் 22ம் தேதி இடதுசாரி விவசாய சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்கள் இணைந்து டெல்டா மாவட்டங்களில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் கருப்பு கொடி கட்டுவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் அமிர்தலிங்கம், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, மாவட்ட தலைவர் கலைமணி, மாவட்ட செயலாளர் குமாரராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி