ஆப்நகரம்

பான் மசாலா, குட்கா பொருட்கள் மீதான தடை ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது உறுதி.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி!

பான் மசாலா‍, குட்காவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்த உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என திருவாரூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 27 Jan 2023, 6:07 pm

ஹைலைட்ஸ்:

  • பான் மசாலா‍, குட்காவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் ஆணை
  • உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்
  • திருவாரூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
பான் மசாலா‍, குட்காவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்த உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என திருவாரூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று அதிகாலை திருவாரூர் வந்தடைந்தார். முதலாவதாக திருவாரூர் அருகே கேக்கரை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபத்தை திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்று சிறப்பு உரையாற்றினார். தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை மைய கட்டிடம், மருத்துவ மாணவர் மன்றம், நவீன சமையலறை கூடம் ஆகியவைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது, பான்பராக், குட்கா போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுத்தார். கடந்த ஆட்சியில் இவை தாராளமாக கடைகளில் விற்கப்படுவதை 21 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் தெளிவாக்கினர். ஆனால் விற்பனையை தடை செய்யாமல் 21 சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யவே எத்தனித்தார்கள். ஆனால் போதைபொருளுக்கு எதிராக இப்போது நடவடிக்கை மேற்கொண்டு கோடிக்கணக்கான மதிப்புள்ள போதைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகா போன்ற மாநிலங்களில் இவற்றுக்கு தடையில்லை என்பதால் அங்கிருந்து அவை காய்கறி, பூக்கள் வானங்களில் கடத்தி வரப்படுகிறது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த நிலையில் பான் மசாலா‍, குட்காவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்து உயர்நீதிமன்ற ஆணையிட்டுள்ளது . இதற்கு மேல் முறையீடு செய்ய முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். விரைவில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முறையீடு செய்யப்படும். இளைஞர்களை போதைக்குள்ளாக்கும் இப்பொருட்கள் நிரந்தரமாக தடைசெய்யப்பட வேண்டும். மூக்கு வழியாக செல்லும் மருந்தை இன்று தான் அறிமுகம் செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு டெல்லிக்கு சென்ற போது மத்திய அமைச்சரை சந்தித்து மூக்கு வழியாக செலுத்தும் மருந்தை அரசு ஆஸ்பதிரிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தபட்டுள்ளது. பிரதமரிடம் தெரிவித்து நல்ல முடிவை அறிவிப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் முற்கட்டமாக தனியார் ஆஸ்பதிரிகளுக்கு மட்டுமே இப்போது வழங்கபட்டு வருகிறது. அதற்கு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் 2023 எப்படி இருக்கும்?... மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் முக்கிய அப்டேட்..!

மதுரை எய்ம்ஸ் கட்டடத்துக்கு 242 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அங்கு சுற்றுசுவர் மட்டுமே கட்டபட்டுள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் இந்தியா முழுவதும் தொடங்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டடங்கள் வேகமாக நடந்து வருகிறது. ஆனாலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 100 மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டு ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் பயின்று வருகின்றனர். மாவட்டத்துக்கு ஒரு நர்சிங் கல்லூரி திறக்க கோரியுள்ளோம். அனுமதி கிடைத்தால் முதல் கல்லூரி திருவாரூரில் தொடங்கப்படும்" என்றார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி