ஆப்நகரம்

எடப்பாடிக்கு கூடும் பலம்.. அடி மேல் அடி வாங்கும் ஓபிஎஸ்.. தீயாய் வேலை செய்யும் முன்னாள் அமைச்சர்!

ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடிக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் எடுத்துவரும் நடவடிக்கைகள் ஓபிஎஸ் தரப்பை அப்செட் ஆக்கியுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 27 Jun 2022, 3:50 pm

ஹைலைட்ஸ்:

  • ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடிக்கு ஆதரவு திரட்டும் முன்னாள் அமைச்சர் காமராஜ்
  • எடப்பாடிக்கு பலம் சேர்க்க மாவட்டம் முழுவதும் தீவிர பணிகள்
  • 150 மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil இபிஎஸ் vs ஓபிஎஸ்
கூத்தாநல்லூரில் 150-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் முன்னாள் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை ஏற்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிக பலம் சேர்க்கும் வகையில் தமிழக முன்னாள் உணவு துறை அமைச்சர் காமராஜ் மாவட்டம் முழுவதும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தமிழகத்தின் ஹாட் டாபிக் ஆக மாறியுள்ள அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில், அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவமரியாதை செய்யப்பட்ட சம்வபம் தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் பிறகு இந்த விவகாரம் பூதாகரமாக உருமாறி, இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், அவரவர் தலைவர்களுக்கு பலம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 150-க்கு மேற்பட்டோர் பல்வேறு அரசியல் கட்சியிலிருந்து விலகி, எடப்பாடிக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

ஈபிஎஸ்-ஐ ஒருமனதாக தேர்ந்தெடுக்க தீர்மானம் - இதுவே திருவாரூரின் முடிவு

இந்நிகழ்ச்சியில் கூத்தாநல்லூர் நகர செயலாளர் டி.எம். பசீர் அகமது மன்னை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்க. தமிழ்கண்ணன் அதிமுக மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி