ஆப்நகரம்

மன்னார்குடியில் ஒரே நாளில் நான்கு வீடுகளில் துணிகரம் - கைவரிசை காட்டிச் சென்ற கொள்ளையர்களுக்கு தீவிர தேடுதல் வேட்டை

மன்னார்குடியில் ஒரே நாளில் நான்கு வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக மன்னார்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Curated byM.முகமது கெளஸ் | Samayam Tamil 25 Apr 2023, 7:08 pm

ஹைலைட்ஸ்:

  • மன்னார்குடியில் நான்கு வீடுகளில் தொடர்ச்சியாக திருட்டு
  • சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
  • அடுத்தடுத்து அரங்கேறியுள்ள கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியினர் அச்சம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Mannargudi four house theft
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திருத்துறைப்பூண்டி சாலையில் சின்னம்மா நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சிவகாமி என்றும் மனைவி உள்ளார். இந்த நிலையில் சிங்கப்பூர் நாட்டில் கணேசன் பணிபுரிந்து வந்துள்ளார்.
ஆனால் சமீப காலமாக அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்து இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களாக அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரை கவனித்துக் கொள்வதற்காக அவரது மனைவி சிவகாமியும் மருத்துவமனையில் தங்கி இருந்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த நிலையில் சிவகாமி அவரது வீட்டிற்கு இன்று காலை உணவு சமைத்து எடுத்துச் செல்வதற்காக வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதனை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போதும் வீட்டில் உள்ளே இருந்த பீரோ கதவு உடைக்கப்பட்டு அதிலிருந்த 11 பவுன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சிவகாமி மன்னார்குடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.



அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அப்பகுதியை முழுவதுமாக ஆய்வு செய்து மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் ஆகியவற்றை வரவழைத்து தடயங்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர். இது ஒரு புறம் இருக்க கணேசன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை உடைத்து டிவிஆர்ரையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தைப் போலவே அதே பகுதியைச் சேர்ந்த பிரபாவதி (40) என்பவரின் வீட்டிலும் பின்பக்க கதவை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த எட்டு பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக வீட்டில் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பெயரில் சம்பவ இடத்தில் காவல் துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

12 மணி நேர வேலை நேரத்தை முதல்வர் சீரமைத்து அமல்படுத்த வேண்டும் - திண்டுக்கல்லில் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் பேட்டி

மேலும் அப்பகுதியில் விக்னேஸ்வரன் என்பவரின் வீட்டில் கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கீழ ஒத்தை தெரு சங்கர மடத்தை சேர்ந்த ராஜு (70) என்பவரின் வீட்டில் இருந்து 1.60 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இந்த சம்பவங்கள் குறித்தும் மன்னார்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர். மன்னார்குடி பகுதியில் ஒரே நாளில் நான்கு நபர்களின் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து கைவரிசை காட்டி சென்றுள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
M.முகமது கெளஸ்
நான் முகமது கெளஸ். ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டமும் ஊடகவியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். டிஜிட்டல் ஊடகத்தில் எனக்கு இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளது. க்ரைம் சார்ந்த செய்திகள் எழுதுவதில் முழு ஈடுபாடு காட்டும் ஆர்வம் உண்டு. தற்போது டிஜிட்டல் ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியா, சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி