ஆப்நகரம்

ஜெயலலிதா சொந்தம் நாங்கள் தான்; புதிய அஸ்திரம் எடுத்த ஜெய் ஆனந்த்!

ஜெயலலிதாவின் சொந்தங்கள் நாங்கள் தான் என சசிகலாவின் சகோதரர் மகன் ஜெய் ஆனந்த் திவாகரன் அதிரடியாக கூறியுள்ளார். மேலும் தற்போது எடுத்துள்ள புதிய அஸ்திரம் குறித்தும் ஜெய் ஆனந்த் திவாகரன் விளக்கி கூறி, அதிமுக மேலிடத்துக்கு ஷாக் கொடுத்துள்ளார். இது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

Samayam Tamil 6 Dec 2021, 8:56 am

ஹைலைட்ஸ்:

  • ஜெயலலிதா சொந்தம் நாங்கள் தான்
  • புதிய அஸ்திரம் எடுத்த ஜெய் ஆனந்த்
  • தமிழக அரசியல், அதிமுகவில் பரபரப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
மயிலாடுதுறையில் அண்ணா திராவிடர் கழகம் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி செயலாளர் ஜெய்ஆனந்த் திவாகரன் கலந்துகொண்டார்.

அப்போது அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு ஜெய்ஆனந்த் திவாகரன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், பி.எட். படிக்கும் திருநங்கை ஒருவருக்கு ரூபாய் 20 ஆயிரம் கல்வி உதவித்தொகையை ஜெய்ஆனந்த் வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

வாலிபர் இதயத் துடிப்பை மீட்ட நர்ஸ்; மறுவாழ்வு தந்தவருக்கு பாராட்டுகள்!

இதன் பின்னர் ஜெய்ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் மோசமான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. அதில் இருந்து மீண்டு வருவதற்கு கொஞ்சம் நாட்கள் ஆகும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொந்தங்கள் ஆகிய நாங்கள் விரைவில் எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து நம் நாட்டை நல் வழிபடுத்தி நல்ல திசையில் கொண்டு செல்வதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். எங்கள் வழி... தனி வழி.. பலனை எதிர்பார்க்காமல் எங்களின் கடமைகளை செய்வோம். இவ்வாறு ஜெய் ஆனந்த் என்றார்.

Flash News: 8 வயது சிறுமிக்கு டாக்டர் பட்டம்!

இவ்வாறு திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் கூறி இருப்பதை வைத்து பார்க்கும்போது அதிமுகவை கைப்பற்ற சசிகலா நடத்தும் போரில் யுத்த வீரராக தோள் கொடுப்பது பகிரங்கமாக தெரிகிறது.

இவர்கள் நடத்தும் போர் அதிமுகவில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரியாவிட்டாலும், அதிமுக சசிகலாவின் கைக்கு வரும் வரை ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புக்கு குடைச்சல் இருந்துகொண்டே இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

அடுத்த செய்தி